வெள்ளிக்கிழமை இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து மகாலட்சுமி பாதங்களில் வைத்தால் வீட்டில், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

lashmi with cash
- Advertisement -

மகாலட்சுமி கடாட்சம் பெறுவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து நம்பிக்கையோடு பூஜை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் தாண்டவம் ஆடும்‌. நாம் மட்டும் மகாலட்சுமியை நினைத்தால் போதாது. அந்த மகாலட்சுமி நம்மை நினைக்க வேண்டும். அந்த மகாலட்சுமி தாய்க்கும் நம்முடைய நினைவு வர வேண்டும். அப்போதுதான் நம்முடைய வீட்டில் ஐஸ்வரியம் தங்கும். சரி அந்த மகாலட்சுமி தாயை நாம் வசியம் செய்ய எந்த பொருட்களை வைத்து, எப்படி பூஜை செய்ய வேண்டும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அஷ்ட ஐஸ்வரியமும் பெருக வெள்ளிக்கிழமை பூஜை:
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கோங்க. அதில் சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் தனித்தனியாக இருக்கும் போது ஒரு பவர் என்றால், இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக சேரும்போது அபரிவிதமான ஒரு சக்தியை பெரும். அவ்வளவு நேர்மறை ஆற்றல்.

- Advertisement -

இந்த மூன்று பொருட்களின் வாசமும் பணத்தை வசியம் செய்யக்கூடியவை. மகாலட்சுமிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கக்கூடிய வாசம் இது. ஆகவே வெள்ளிக்கிழமை பூஜையின் போது இந்த மூன்று பொருட்களையும் பூஜை அறையில் வைத்து விட்டு மனம் உருகி மகாலட்சுமி தாயிடம் நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த பரிகாரம் செய்யலாம்.

கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் இந்த பூஜையை முடித்துவிட்டு மகாலட்சுமி பாதங்களில் வைத்தீர்கள் அல்லவா, அந்த மூன்று பொருட்களையும் எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி பீரோவில் வைத்தால், வீட்டில் நிறைய பணம் சேர தொடங்கும். கடன் சுமை படிப்படியாக குறையும். மேலே சொன்ன பரிகாரம் வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை செய்யவது.

- Advertisement -

தீராத கடன் தீர மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற வழிபாடு:
முடிந்தால் மகாலட்சுமிக்கு உங்கள் கைகளால் மருதாணி பூவை வைத்து வரங்களை கேளுங்கள். தொடர்ந்து 48 நாள் மகாலட்சுமிக்கு மருதாணி பூவை வைத்து என்ன வரம் கேட்டாலும் அது 48 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மருதாணி என்பது மகாலட்சுமியின் சொரூபம் அல்லவா. ஆகவே மருதாணி பூவுக்கு நிச்சயம் மகாலட்சுமி மயங்குவாள். அந்த மருதாணி பூவை வைத்து மகாலட்சுமியை நம்மால் வசியம் செய்ய முடியும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய செவ்வாய், வெள்ளியில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன? காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்தது நாம் செய்கிறோமா?

ஆகவே ரொம்பவும் பண கஷ்டப்படுபவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து மகாலட்சுமிக்கு மருதாணி பூவை வைத்து விளக்கு ஏற்றி ஒரே ஒரு வேண்டுதலை வைத்து வர, அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்பது நம்பிக்கை. மேலே சொன்ன இரண்டு பரிகாரங்களில் உங்களுக்கு எது தேவையோ அதை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -