கேட்டதைக் கொடுக்கும் அதிசய தீபம்! இந்த தீபத்தை ஏற்றினால் தீராத பண கஷ்டம் கூட, இந்த விளக்கு எரிந்து முடிவதற்குள் தீர்ந்துவிடும்.

mahalakshmi
- Advertisement -

பணக்கஷ்டத்தை எளிமையாக தீர்க்க இதை விட சுலபமான வழிபாட்டை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. மகாலட்சுமியை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால், கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். குறிப்பாக கடன் பிரச்சனை, பண பிரச்சனை இவைகளில் இருந்து விடுபட, இந்த லட்சுமி தீப வழிபாட்டை செய்யலாம். நகைகளை அடமானத்தில் வைத்திருந்தால் அந்த நகைகளை மீட்டெடுக்கவும் இந்த வழிபாடு கை கொடுக்கும். அடமானத்தில் இருக்கும் சொத்துக்களை மீட்டு எடுக்கவும் இந்த தீப வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். எளிமையான முறையில் வீட்டில் லட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி. ஆன்மீகம் செல்லும் வழிபாடு இதோ உங்களுக்காக.

கேட்டதை கொடுக்கும் லட்சுமி தீப வழிபாடு:
இந்த வழிபாட்டை மேற்கொள்ள நமக்கு ஒரு வெற்றிலை தேவை. வெற்றிலைக்கு மேலே வைத்து ஏற்றுவதற்கு சின்ன மண் அகல் தீபம் தேவை. அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அந்த திரி மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்து நிழலிலேயே காய வைத்தால் மஞ்சள் திரி தயார்.

- Advertisement -

மாலை 6:00 மணிக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்ற வேண்டும். நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு தட்டின் மேல் வெற்றிலை வைத்து, அந்த வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மேலே அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி, இந்த மஞ்சள் திரி போட்டு விலக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

அந்த வெற்றிலையின் மேல் மகாலட்சுமிக்கு நிவேதியமாக இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை வைத்து தீபம் ஏற்றி மனமுருகி மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏற்றக்கூடாது. நிலைவாசலுக்கு உள்பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு விளக்கை ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

இந்த விளக்கின் முன்பாகவே அமர்ந்து மகாலட்சுமியை மனம் உருகி வீட்டிற்குள் அழையுங்கள். ‘ஓம் மகாலட்சுமி தாயே வருக வருக!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த இரண்டு கற்கண்டுகளை எடுத்து நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு பக்கத்திலும் ஒவ்வொரு கற்கண்டு போட்டு விடுங்கள். அதை எறும்புகள் வந்து சாப்பிட்டால் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

மேல் சொன்ன வழிபாட்டை செய்து வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கலாம். மகாலட்சுமி விரும்பி உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் பண கஷ்டம் எல்லாவற்றையும் தீர்த்து விடுவாள். இந்த வெற்றிலை தீபத்திற்கு அவ்வளவு பெரிய மகத்துவம் உண்டு. தினமும் இந்த விளக்கை ஏற்ற முடியாதவர்கள் கூட, வெள்ளிக்கிழமை ஒரு நாள் ஆவது இந்த வெற்றிலை தீபத்தை வீட்டில் ஏற்றினால், மகாலட்சுமி நிச்சயம் மனம் மகிழ்ந்து வரங்களை கொடுத்து விடுவாள்.

இதையும் படிக்கலாமே: கடன் என்ற வார்த்தை கூட உங்களை நெருங்காதிருக்க இன்று வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு இந்த முடிச்சை கட்டி வைத்து விடுங்கள். துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு

தினமும் பழைய வெற்றிலையை தூக்கி போட்டு விட வேண்டும். புது வெற்றிலையில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். அதே மண் அகல் விளக்குகளை துடைத்து தினமும் தீபம் ஏற்றலாம். பண கஷ்டம் உள்ளவர்கள் யோசிக்கவே யோசிக்காதீங்க. தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு எல்லாம் சீக்கிரத்தில் விடிவு காலம் பிறக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -