மார்கழி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடு

perumal2
- Advertisement -

நாளை மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட நாளைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும். நாளைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் அல்லவா இது.

நாளைய தினம் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யவில்லை என்றால் பிறகு எப்படி. சரி சகல விதமான சஞ்சலங்களும் நம் குடும்பத்தை விட்டு நீங்க, சகல விதமான ஐஸ்வர்யங்களையும் பெற நாளைய தினம் பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது? ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மார்கழி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடு

இந்த மார்கழி மாதம் முழுவதும் உங்களால் அதிகாலை வேளையில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சரி, நாளைய தினம் அதிகாலை வெளியிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு, பெருமாளை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். வீட்டில் பெருமாளுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், இல்லையென்றால் சுப்ரபாதம் ஒலிக்க விடுங்கள்.

மனதை அமைதியாக வைத்து பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளிடம் முறையிட வேண்டும். மகாலட்சுமி தாயாரிடமும் பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். பிறகு வீட்டு பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால், பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவியுங்கள்.

- Advertisement -

‘நாளைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்’. பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலை, பிரசாதம் இவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

முடிந்தால் பெருமாள் கோவிலில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் மல்லிப்பூ வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்புங்கள். பெருமாள் கோவில் பிரசாதமான இந்த துளசி இலையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வாங்கி வந்த துளசி இலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அந்த தண்ணீரை தீர்த்தமாக பருகலாம்.

- Advertisement -

மீதம் இருக்கும் துளசி இலையை, பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பண கஷ்டமும் தீரும். இந்த துளசி தீர்த்தத்தை குடிப்பதால் உங்கள் உடம்பில் இருக்கும் பிணி பீடையும் விலகும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததால் உங்கள் இல்லறம் இருள் நிலையிலிருந்து விலகும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

நாளைய தினம் பெருமாள் கோவில் துளசி பிரசாதம் உங்களுக்கு கிடைத்தால் அது ஒரு பெரிய பொக்கிஷம். உங்கள் கஷ்டங்கள் தீர போவதற்கான அறிகுறி. வாய்ப்பு உள்ளவர்கள் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள். எளிமையான வழிபாடு தான். நாளைய தினம் பெருமாள் பாதங்களை பற்றி கொண்டவர்களுக்கு நிச்சயம் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும் இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -