மார்கழியில் எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுவது?

vialkku1
- Advertisement -

இன்று மார்கழி மாதம் பிறந்திருக்கின்றது. மார்கழி முதல் நாளை நம்முடைய எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்றி வரவேர்த்திருப்போம். இன்றைய நன்னாளில் ஆன்மீகம் சார்ந்த ஒரு சில நல்ல தகவலை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மார்கழி மாதத்தில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும், என்ன திரி போட்டு தீபம் ஏற்றினால் வாழையடி வாழையாக நம் குடும்பத்தை தொடரும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த கேள்விகளுக்கு பதில் தெரிய பதிவை தொடர்ந்து படியுங்கள்.

மார்கழி மாதம் விளக்கு ஏற்ற வேண்டிய எண்ணெய்

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிலை வாசலில் இரண்டு விளக்கு, பூஜை அறையில் எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை நினைத்து, வேண்டுதல் வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் மனதில் நினைத்த வேண்டுதல் உடனே பலிக்கும். மார்கழி மாதத்திற்க்கு அத்தனை பவர் இருக்கு.

- Advertisement -

இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சரி, இந்த மார்கழி மாதம் முழுவதும் எந்த எண்ணெயில் வீட்டில் விளக்கு ஏற்றினால் சிறப்பு. சுத்தமான நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலமாகத்தான் முழு பலனையும் நம்மால் பெற முடியும். தவிர பஞ்ச கூட்டு எண்ணெய், அல்லது வேறு ஏதாவது எண்ணெயை பயன்படுத்தி வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் முழு பலனையும் நம்மால் பெற முடியாது.

சுத்தமான நல்லெண்ணெய் வாங்குவதற்கு கொஞ்சம் கூடுதல் பணம் செலவு ஆகத்தான் செய்யும். இருந்தாலும் சிரமம் பார்க்காமல் சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் வாங்கி மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். அதில் கிடைக்கும் பலனை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. குறிப்பாக இந்த நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் நவகிரக தோஷங்கள் எதுவும் உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனையை கொடுக்காது. உங்கள் வீடு முழுவதும் சுபிட்சம் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

இந்த மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களுடைய வீட்டில் பக்தி பாடல்களை ஒலிக்க விடுங்கள். சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல் வரிகளை ஒலிக்க விடுங்கள். மார்கழி மாதம் முடியும் போது, என்னடா இது மார்கழி மாதம் இதற்குள் முடிந்து விட்டது. இந்த மார்கழி மாத நாட்கள் இதே போல தொடராதா என்று தோன்றும் அளவுக்கு உங்களுடைய மனது மாறிவிடும். அந்த அளவுக்கு ஒரு தெய்வீக கடாட்சத்தை கொடுக்கக்கூடிய வழிபாட்டு முறைகள் தான் இவை.

அதேபோல நீங்கள் விளக்கில் போடக்கூடிய திரி வாழைத்தண்டு திரியாக இருந்தால், ரொம்ப ரொம்ப சிறப்பு. சமைப்பதற்கு நாம் வாழை தண்டு வாங்குவோம் அல்லவா. அதை வெட்டும்போது அதிலிருந்து நார் வரும் அதை அப்படியே விரலில் சுற்றி சுற்றி எடுத்து தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாரை எடுத்து அப்படியே உள்ளங்கையில் வைத்து சுருட்டி திரித்தால் கொஞ்சம் தடிமனான விளக்குத்திரி போலவே வரும்.

- Advertisement -

அதை அப்படியே நிழலிலேயே காய வைக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களில் காய்ந்து விடும். அதை எடுத்து விளக்கில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் வாழையடி வாழையாக உங்கள் குடும்பத்தை தொடரும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

வாய்ப்பு உள்ளவர்கள் இந்த மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாழைத்தண்டு திரி போட்டு குடும்ப கஷ்டம் தீர பிரார்த்தனை செய்யலாம் நிச்சயம் உங்கள் குடும்ப கஷ்டம் தீரும். அதேபோல நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம் தவறு கிடையாது. ஆனால் நல்லெண்ணெய் விட விலை உயர்ந்தது. முடிந்தவர்கள் பூஜையறையில் மட்டும் நெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம். அதுவும் நன்மையை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு

குறிப்பாக வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் குடும்பத்தில் பணம் கஷ்டமே வராது. உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு பெருகிக்கொண்டே செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி மார்கழி மாதத்தில் அந்த பரமாத்மாவின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -