மார்கழி மாதம் செய்ய வேண்டிய தானம்

kolam2
- Advertisement -

பொதுவாகவே நம்முடைய பேச்சு வழக்கில் ஒரு பழமொழி உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் மார்கழி மாதத்தோடு நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நம்மை கடந்து போக, நம்முடைய கஷ்டங்களுக்கு எல்லாம் தை பிறக்கும் போது ஒரு வழி கிடைக்க வேண்டும் என்றால், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் மார்கழி மாதத்தில் இந்த தானங்களை செய்து விடுங்கள்.

உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும், தை பிறக்கும் போது ஒரு விடிவு காலம் பிறந்துவிடும். மார்கழி மாதம் தேவர்களுக்கே உரிய மாதம். இறைவழிபாட்டிற்கே உரிய மாதம். இந்த மாதத்தில் நம் கஷ்டத்தை தீர்த்து வைக்க போகும் அந்த தானங்கள் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மார்கழி மாதம் செய்ய வேண்டிய தானம்

அந்த காலத்திலேயே மார்கழி மாதத்துடைய தானத்தை நிலை வாசலில் கோலம் போடுவதில் இருந்தே ஆரம்பித்து வைத்தார்கள் நம்முடைய முன்னோர்கள். இன்று நீங்கள் அரிசிமாவில் கோலம் போட்டாலும் சரி, கோலம் போடவில்லை என்றாலும் சரி, ஒரு கைப்பிடி பச்சரிசியில் ஒரு கைப்பிடி சர்க்கரை சேர்த்து, கலந்து அதை கொண்டு போய் ஏதாவது ஒரு கோவிலில் இருக்கும் மரத்தடியில் தூவி விட்டு வந்து விடுங்கள்.

இந்த தானத்தின் மூலம் இலட்சக்கான எறும்புகள் பசி ஆறும். உங்கள் கர்ம வினையால் வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்தால் கூட அது தீர்த்து வைக்கக்கூடிய பல எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. இதை இந்த மார்கழி மாத குளிர்காலத்தில் நீங்கள் செய்தீர்கள் என்றால் வாயில்லா ஜீவன்கள் உங்களை வாழ்த்தும். அந்த வாழ்த்து உங்களுக்கு ஒரு நல்லதை நிச்சயம் காட்டிக் கொடுக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு தானம் கொடுத்து விட்டோம்.

- Advertisement -

அடுத்து கஷ்டப்படும் சக மனிதர்களுக்கு உதவ வேண்டாமா. கண் முன்னே பார்ப்போம். வீதி ஓரங்களில், போர்த்திக் கொள்ள போர்வை இல்லாமல், படுக்க ஒரு பாய் கூட இல்லாமல், குளிரில் நடுங்கக் கூடிய மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உங்களால் முடிந்தவரை இப்படி இருப்பவர்களுக்கு ஒரு போர்வை, ஒரு பாய், வாங்கி கொடுத்தாலும் இந்த மாதத்தில் பெரிய அளவில் புண்ணியம் சேரும் பார்த்துக்கோங்க.

அடுத்தபடியாக அன்னதானம். கஷ்டப்படும் ஒரு ஏழை குடும்பத்திற்கு, ஒரு மூட்டை அரிசியை வாங்கிக் கொடுங்கள். அந்த மூட்டை அரிசி அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவாக இருக்கும். அவர்கள் வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்தும்போது உங்கள் கர்ம வினை குறையும். நிச்சயம் மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கும் போது உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போகும்.

இதையும் படிக்கலாமே: சகல பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு

மேலே சொன்ன இந்த எளிமையான தானங்களை எப்போது வேண்டுமென்றாலும் எந்த நாள், எந்த கிழமையில், எந்த மாதத்தில் வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்த மார்கழி மாதத்தில் செய்யும் போது இதற்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -