கொஞ்சம் மரிக்கொழுந்து இருந்தால் போதும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் புகழும், உச்சியைத் தொடும்.

marikozhunthu
- Advertisement -

எல்லோராலும் நாம் மதிக்கப்பட வேண்டும். எல்லோரது முன்பும் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அந்தஸ்தும் மரியாதையும் நம்மை தேடி வர வேண்டும். இன்னும் மேலே சொல்லப்போனால் எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாம் மாற வேண்டும். புகழ் நம்மை தேடி நம் பின்னால் வரவேண்டும். என்ற எண்ணம் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும். சில பேருக்கு பெயர் புகழ் பதவி பணம் மரியாதை அனைத்தும் தானாக வந்து குவியும். சிலபேர் என்னதான் முயற்சி செய்தாலும் சரி அவர்களால் பெயர் புகழ் பதவி பணத்தை அடையவே முடியாது.

உங்களுக்கும் வாழ்க்கையில் இந்த பிரச்சனை உள்ளதா? எல்லோருக்கும் பிடித்த மனிதர்களாக நீங்களும் மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். நீங்கள் நம்ப முடியாத நிறைய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வாசனை நிறைந்த தாவரம் தான் இந்த மரிக்கொழுந்து. சிலர் இதை தவனம் என்றும் சொல்லுவார்கள். இதன் வாசமும் நிறமும் வசீகரத் தன்மை கொண்டது. தினம்தோறும் இந்த மரிக்கொழுந்து உங்களுக்கு கிடைத்தால் அதை வாங்கி சுவாமிக்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் உங்கள் பூஜைக்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும். இறை சக்தியை வசியம் செய்ய கூடிய சக்தியும் இந்த மரிக்கொழுந்துக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக கொஞ்சமாக மரிக்கொழுந்து வாங்கி நிழலில் நன்றாக உலர்த்தி விடுங்கள். மரிக்கொழுந்து நன்றாகக் காய்ந்ததும் அதை மிக்ஸியில் போட்டு அல்லது கையால் இடித்தோ நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பொடியை சுத்தமான விபூதியில் கலந்து கொள்ளவேண்டும். தினம்தோறும் இந்த மரிக்கொழுந்து பொடி கலந்த விபூதியை நெற்றியில் இட்டு சென்றால் போதும்.

- Advertisement -

உங்களுடைய வசீகரத் தன்மை அதிகரிக்கும். இதுவரைக்கும் உங்களை கண்டாலே பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள் கூட, உங்களை தேடி நாடி வருவார்கள். நீங்கள் தொட்ட காரியத்தில் எல்லாம் சுலபமாக வெற்றியை அடையலாம். நீங்கள் ஆசைப்பட்ட பெயர் புகழ் பதவி பணம் அனைத்தும் ஒவ்வொன்றாக உங்கள் பின்னால் வரும்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய வீடுகளில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை. கணவன்-மனைவிக்குள் சுத்தமாக அந்நியோன்யமே இருப்பது கிடையாது. ஒருவர் முகத்தை கண்டாலே ஒருவருக்கு பிடிக்கவில்லை என்று கூட சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் மனைவியாக இருந்தால், உங்களுடைய கணவருடன் வாழ்நாள் முழுவதும் அன்னியோன்யமாக சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்தால் தினமும் கொஞ்சமாக மரிக்கொழுந்தை எடுத்து உங்களுடைய கணவரை நினைத்து உங்களுடைய சரடில் சொருகிக் கொள்ளுங்கள். லேசாக ஒரு இலை மரிக்கொழுந்தே எடுத்து தாலிக்கொடியில் சொருகிக்கொண்டால் கூட போதும். உங்களுக்கும் உங்களுடைய கணவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தினம்தோறும் சரடில் புதிய மரிக்கொழுந்தை தான் சொருக வேண்டும். குளித்து முடித்து விட்டு காலையில் சரடில் வைத்த மரிக்கொழுந்தை, மறுநாள் காலை குளிக்கும்போது எடுத்து குப்பையில் போட்டு விடலாம்.

நீங்கள் கணவராக இருந்து, உங்களுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் சிறிய மரிக்கொழுந்தை ஒரு பேப்பரில் அல்லது வெள்ளை துணியில் வைத்து மடித்து அப்படியே உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பேண்ட் பாக்கெட்டில் வைக்கக்கூடாது. மேலே ஷர்ட் பேகடில் தான் வைக்கவேண்டும். உங்களுடைய மனைவியை நினைத்து மரிக்கொழுந்து இப்படி பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் போதும். உங்கள் மனைவியோடு சந்தோஷமாக அந்நியோன்யமாக வாழ்நாள் முழுவதும் வாழ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். சின்ன சின்ன பரிகாரங்கள் தான் ஆனால் பலன், நீங்கள் எதிர்பாராத அளவுக்கு பெரியதாக கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -