பணம், நகை, சொத்து சுகம், இதில் எது வேண்டும் உங்களுக்கு? இந்த 1 தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, வரங்களை கேட்டுத்தான் பாருங்களேன்! கேட்டது சொர்க்கத்திலிருந்து உடனே கிடைக்கும்.

deepam
- Advertisement -

யோகம் அதிர்ஷ்டம், அதற்கு மேலே பேரதிர்ஷ்டம் என்று சொல்லக்கூடிய பல நன்மைகள் உங்களை தேடி வர வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் மருதாணி செடியை வைத்து வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டு முன் பக்கத்திலும் இந்த மருதாணி செடி அமைந்திருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் யாரும் மருதாணி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பது கிடையாது. முடிந்தவரை ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை உங்களுடைய வீட்டு வாசலின் முன் பக்கத்தில் வைத்து வளர்ப்பது வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

maruthani-swastic

மருதாணி செடி இருக்கும் இடம் சொர்க்கமாக மாறிவிடும். நல்ல தேவதைகளின் வருகை இருக்கும். துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்கள் வீட்டில் பணமழை பொழிய வைக்க கூடிய சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு. அப்படி என்றால் என்ன. கூரையை பிச்சுக்கொண்டு பணம் கொட்டுமா என்ன, கிடையாது. மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் நிரந்தரமாக வருகை தந்து கொண்டே இருப்பாள். வீட்டில் வறுமை இருக்காது.

- Advertisement -

சரி, இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே, இதில் என்ன புதியதாக தெரிந்துகொள்ள இருப்பது, என்று சிலர் சிந்திக்கலாம். இந்த மருதாணி இலைகளை வைத்து இன்று ஒரு தார்மீக ரீதியான பரிகாரத்தை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெளியிலிருந்து மருதாணி இலைகளை எடுத்து வந்து உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றலாம். இருப்பினும் உங்கள் வீட்டில் மருதாணி செடியை வளர்த்து அதில் இருக்கக்கூடிய இலைகளில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு பேரதிஷ்டம் கிடைப்பது உறுதி.

marudhani

ஒரு பித்தளை தட்டில் மருதாணி இலைகளைப் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளுடன் மூன்று 1 ரூபாய் நாணயங்களை, வைத்து விடுங்கள். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கினை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியை நினைத்து இந்த தீபம் ஏற்ற வேண்டும். இந்த மருதாணி தீபத்தை தினம்தோறும் உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். மருதாணி இலைகளை தினமும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மருதாணி இலைகள் காய்ந்தாலும் அதனுடைய தன்மை மாறாது.

- Advertisement -

மாதத்திற்கு ஒரு முறை இந்த மருதாணி இலைகளை எடுத்து அரைத்து உங்களுடைய கைகளில் இட்டுக் கொள்ளலாம். வீட்டில் பெண்கள் இப்படி தீபம் ஏற்றி வைக்கப்பட்ட மருதாணி இலைகளை கையில் இட்டுக்கொள்வது மகாலட்சுமி அம்சத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெண் அதிர்ஷ்டமான ராசியான பெண்ணாகவும் மாறி விடுவாள்.

இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் என்ன பலன். நிச்சயமாக பேர் அதிர்ஷ்டம் உங்களுக்கு படிப்படியாக வரத்தொடங்கும். சொத்து வேண்டுமா, வீடு வேண்டுமா, வாகனங்கள் வேண்டுமா, நகைகள் வேண்டுமா என்ன வரங்கள் வேண்டுமோ அந்த மருதாணி இலை தீபதிடம் நம்பிக்கையோடு மனமுருகி கேளுங்கள்.

vetrilai-deepam1

இந்த வரங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்க முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கான வேலையை அந்த தீபம் பார்த்துக் கொள்ளும். சுவர்க்கத்திலிருந்து உங்களுக்கான வரங்கள் படிப்படியாக உங்கள் கைகளை வந்தடையும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -