செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் மாசி முதல்நாள் முருகர் வழிபாடு

murugar
- Advertisement -

நாளை மாசி மாதம் முதல் நாள் பிறக்கவிருக்கின்றது. அதுவும் செவ்வாய்க்கிழமையில் இந்த மாத பிறப்பு வந்திருக்கிறது. மாசி மாதத்தில் வரக்கூடிய 30 நாட்களுமே சிறப்பு வாய்ந்த நாட்கள் என்று சொல்லலாம். மாசி மகம், மகா சிவராத்திரி, மாசி ஏகாதசி, மாசி மாத பூசம், மாசி பெளர்ணமி, மாசி அமாவாசை என எல்லா விசேஷ நாட்களுமே ஒவ்வொரு வகையில் சிறப்புக்குரிய நாட்கள் தான்.

முருகப்பெருமானை எல்லோரும் தகப்பன்சாமி என்று சொல்லுவோம். அந்த முருகப்பெருமானுக்கு உரிய நாள் இந்த செவ்வாய்க்கிழமை. முருகப்பெருமான் தனது தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் ரகசியத்தை உச்சரித்த நாளும் இந்த மாசி மாதம் தான். ஆகவே மந்திர உபதேசம் பெறுவதற்கும் இந்த மாசி மாதம் மிக மிக உகந்தது.

- Advertisement -

சரி, இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்திய மாசி மாதம், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்திருக்கிறது, இந்த நாளில் முருகர் வழிபாட்டை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. கடன் பிரச்சனை, தீராத பண பிரச்சனையில் இருந்து விடுபட நாளைய தினம் வீட்டில் முருகனுக்கு எப்படி விளக்கு ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.

மாசி முதல் நாள் முருகர் வழிபாடு

பொதுவாகவே முருகருக்கு வெற்றிலையின் தீபம் ஏற்றுவது வெற்றியை கொடுக்கும். கடன் சுமையை குறைக்கும். செல்வ பலத்தை அதிகரிக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த வெற்றிலை தீபத்தை நாளை மாசி ஒன்றாம் தேதியுடன், சேர்ந்து வந்திருக்கும் செவ்வாய்க்கிழமை அன்று உங்க வீட்டில் ஏற்றனும். ஒரு தாம்பூல தட்டு எடுத்துக்கோங்க.

- Advertisement -

அதில் 6 வெற்றிலைகளை அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நேராக வைத்தாலும் சரி, வட்டமாக வைத்தாலும் சரி அது உங்களுடைய சவுகரியம். வெற்றிலைக்கு மேலே மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, ஆறு மண் அகல்விளக்குகளை வைத்து பசு நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது சிறப்பு.

நெய் ஊற்ற முடியாது என்பவர்கள் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றலாம். பூஜை அறையில் நட்சத்திர கோலம் போட்டு சரவணபவ என்று எழுத முடியும், என்பவர்கள் அந்தக் கோலத்தை போடுங்கள். பிறகு அந்த கோலத்தின் மேல், இந்த தாம்பூல தட்டை வைத்து, விளக்கு ஏற்றி, முருகப்பெருமானை மனதார நினைத்து கடன் சுமை குறைய வேண்டும்.

- Advertisement -

வருமானம் பெருக வேண்டும். சொந்த நிலம் வாங்க வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எந்த எந்த வேண்டுதலை வேண்டும் என்றாலும் வைக்கலாம். வீட்டில் சுபகாரிய தடை விலகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் கட்டாயமாக செவ்வரளி பூ வாங்கி முருகருக்கு சாத்துங்கள்.

6 தீபங்களை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு, 6 முறை ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை மனதார சொல்லி முருகப்பெருமானின் பாதங்களைச் சரணடையுங்கள். இந்த வழிபாட்டிற்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து வைக்கலாம். நிவேதனம் செய்ய முடியாது என்பவர்கள் இரண்டு வாழைப்பழங்களையாவது முருகருக்கு நிவேதனம் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாசி 1ஆம் தேதி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்

இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இந்த வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு போய் ஒரு விளக்கு போட்டு சாமி கும்பிடுங்க. எளிமையான இந்த வழிபாடு உங்களை வாழ்க்கையில் வளமாக வாழ செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -