- Advertisement -
உன் மௌன சிறைகளின்
கம்பிகளுக்கு நடுவில்
என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது..
ஒருமுறையேனு உற்றுபாரடி
உன் காதலன் நான் இங்கு
கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்..
உன் குரல் கேட்டிட..
உன்னோடு நடந்திட
எத்தனையோ நாட்கள்
நான் தவித்து காத்திருக்கிறேன்..
என் காதல் கனவை
உன் கோபம் கொண்டு
கலைத்துவிடாதே கண்மணியே..
- Advertisement -
இதையும் படிக்கலாமே:
காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை
காதலியின் மௌனமோ அல்லது காதலனின் மௌனமோ காதலர்களை தவியாக தவிக்க விடும். அந்த தவிப்பிற்கு எல்லாம் கிடையாது. அந்த சூழலில் எப்படியாவது தன் காதலனோ அலலது காதலியோ தன்னிடம் பேச வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துடிப்பார்கள் காதலர்கள். அப்படிப்பட்ட காதலர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.
காதல் கவிதைகள், உள்ளம் கவர்ந்த கவிதைகள், சோக கவிதைகள் என அனைத்தையும் இங்கு படிக்கலாம்.
- Advertisement -