உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட
ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் சோகம் – காதல் கவிதை
காதலிக்கும் காதலனோ காதலியோ தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் தன் காதலுக்காக செலவிட வேண்டும் இன்று நினைத்தாலும் சில மாதங்களிலே அந்த நினைப்புகள் எல்லாம் மாறிப்போவது வழக்கம் தான். இது காதலின் தவறு கிடையாது. கடவுளின் படைப்பே அப்படி தான்.
ஒரு மனிதனுக்கு ஒரு விடயம் கிடைக்கும் வரை தான் அதில் அவனுக்கு முழு ஆற்வம் இருக்கும். அதன் பிறகு அவன் வேறு ஒரு முக்கிய தேவையை நோக்கி நகர ஆரமிப்பான். அது மிகவும் இயல்பான ஒன்று தான். ஆகையால் காதலிப்பவர்கள் ஒரு கட்டத்தில் தன் காதலனோ காதலியோ தான்னை கண்டுகொள்வதில்லை என்று புலம்புவதற்கு முன்பாக மனித வாழ்வின் எதார்த்தத்தை சிறிதளவு சிந்தித்து பார்த்தாலே காதலர்களுக்கு இடையேயான பல சண்டைகள் இல்லமால் போகும்.
நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.