மஹாலட்சுமி வீட்டிற்குள் மனம் விரும்பி நுழைய இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள் வீட்டிற்குள் நுழைந்த லட்சுமி தேவிக்கு, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே வராது.

mahalakshmi-vilakku
- Advertisement -

மகாலட்சுமியை நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கு, மகாலட்சுமி தேவியை வசியப்படுத்துவதற்கும் சாஸ்திர ரீதியாக நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் ஒரு மிகச் சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து பண கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது. வருமானத்திற்கு வழி இல்லை. வந்த வருமானம் கையில் தங்கவில்லை. வீட்டில் ஒரு நல்லதை நடத்திப் பார்க்க முடியவில்லை. திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பிறந்த குழந்தை சொல்பேச்சு கேட்க வில்லை. சொத்து சுகம் நகை வாங்க கூடிய யோகம் வரவில்லை. இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, இந்த ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி வாருங்கள். எல்லா பிரச்சினைக்கும் விமோசனம் நிச்சயம் கிடைக்கும்.

எல்லா பிரச்சினைக்கும் தீர்வை கொடுக்க மகாலட்சுமியால் முடியுமா. என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாக குடி கொண்டு விட்டால், அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைத்துவிடும். பிறகு என்ன கவலை? எல்லா செல்வங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நம் வீடு தேடி வர தொடங்கி விடும்.

- Advertisement -

நெல்லிக்காய் பொடி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காய்ந்த நெல்லிக்காய் பொடி என்று கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மண் அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நெல்லிக்காய் பொடியை போட்டு, திரி போட்டுத் தீபம் ஏற்ற வேண்டும். வழக்கம்போல வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டில் எத்தனை தீபங்களை ஏற்றுவீர்களோ அதையெல்லாம் ஏற்றி வைத்து விட்டு, சுவாமிக்கு அலங்காரங்கள் செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை இந்த ஒரு நெல்லிக்காய் தீபத்தையும் மகாலட்சுமிகாக ஏற்றி வையுங்கள். அதன்பின்பு எப்போதும் போல தீப தூப ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

சிறிது நேரம் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் நெல்லிக்காய்பொடி போட்ட இந்த மண் அகல் விளக்கு தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் மந்திரத்தை சொல்லி, மகாலட்சுமியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த நெல்லிகாய் தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்து வர, உங்களுடைய இன்னல்கள் படிப்படியாக குறைவதை உணர முடியும். இதோடு சேர்த்து மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் இதேபோல நெல்லிக்காய் பொடி போட்டு 9 தீபங்களை மகாலட்சுமி தாயாரை நினைத்து வீட்டில் ஏற்றி வர உங்களுடைய வீடு அத்தனை சுபிட்ச நிலைக்கு வந்துவிடும். வீட்டில் லட்சுமி கலசத்திற்கு குறைவே இருக்காது.

அதிர்ஷ்டமான வீடு என்றால் அது உங்கள் வீடு தான் என்ற எண்ணம் உங்களுக்கே தோன்றும். அந்த அளவிற்கு ஒரு பாஸிடிவ் எனர்ஜி உங்கள் வீட்டில் வந்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேலே சொன்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -