நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? உங்க கனவில் நெருப்பு வந்திருக்கிறதா?

fire-on-dream
- Advertisement -

கனவுகள் பலவிதமாக நாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்மையே அறியாமல் படமாக வந்து செல்கிறது. நாம் காணும் அனைத்து கனவுகளும் பலன் தருபவை என்று கூற முடியாது. ஆனால் ஒரு சில கனவுகளுக்கு ஒரு சில குறிப்பிட்ட பலன்கள் கனவு சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியான பலன்களில் நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கனவுகளில் மிகவும் முக்கியமானது பயமுறுத்தும் கனவுகள் ஆகும். நம் ஆழ்மன எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய இத்தகைய கனவுகள் சில ஆபத்திலிருந்து நம்மை காப்பவையாகத் தான் இருக்கிறது. திடீரென கனவு கண்டு அலறி அடித்து எந்திரிப்பவர்கள் ஏதோ ஒரு பயத்தில் இருந்திருப்பவர்கள் தான் ஆனால் இது நல்ல சகுனமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நம் கனவில் அடிக்கடி நெருப்பு வந்தால் ஏதோ ஒரு தீராத நோயால் நாம் அவதிப்பட்டு கொண்டிருப்போம் அல்லது நாம் அதீத கோவக்காரர்களாக இருப்போம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய நபர்களுக்கு தான் நெருப்பு அடிக்கடி கனவில் வருமாம். உங்கள் உடலில் நெருப்பு பற்றி கொண்டு எரிவது போல கனவு கண்டால் நெருங்கியவர்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போவதை குறிக்கிறது. அதுவே மற்றவர்களுடைய உடலில் நெருப்பு எரிவது போல நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப்போவதை குறிக்கிறது.

அணிந்திருக்கும் உடைகள், துணிமணிகள் எரிவது போல கனவு கண்டால் உங்களுக்கு மறதி அல்லது கவனக்குறைவால் பிரச்சினைகள் வரப்போவதை குறிக்கிறது. மனம் தெளிவாக இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வீடு பற்றி எரிவது போல கனவு கண்டால் அவ் வீட்டின் உரிமையாளருக்கு ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாடு வருவதை குறிக்கிறது.

- Advertisement -

வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது போல கனவு கண்டால் தீராத துன்பம் உங்களை துரத்த போகிறது என்று அர்த்தமாம். நெருப்பு அணைக்கப்பட்டு விட்டது அல்லது நீங்கள் நெருப்பை அணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது போன்ற கனவுகளுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் தடைகளை எதிர்த்து வெற்றிவாகை சூட போகிறீர்கள் என்பது அர்த்தமாம். நெருப்பை அணைப்பது மட்டுமல்ல பொதுவாகவே ஒரு கெட்ட விஷயம் நடந்து அது சரியானது போல கனவு வந்தால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய இன்னல்கள் தீர போவதாக அர்த்தம்.

தீ பல வகைகளில் உண்டு. தீ ஜோதி சுடராக, விளக்கு ஜோதியாக நீங்கள் காண நேர்ந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் இது போன்ற கனவுகள் உங்களுக்கு வரும். உடனே அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று இஷ்ட தெய்வத்தை தரிசனம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இரவு தூங்கும் போது இந்த ஒரு பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அது மறுநாள் காலை ஒன்னுமே இல்லாமல் போய்விடும்.

தீயை மிதிப்பது போல கனவில் வந்தால் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. நெருப்பை வாயால் ஊதி அணைப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் இருளை காண இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. வரப்போகிற பிரச்சனைகளையும், நன்மைகளையும் குறிப்பாக சொல்ல கூடிய இத்தகைய நெருப்பு சார்ந்த கனவுகள் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவது கிடையாது. அப்படி வந்தால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

- Advertisement -