ஒரு கைப்பிடி கல் உப்பில் இதை மட்டும் செய்து பாருங்களேன். மேஜிக் போட்ட மாதிரி நீங்கள் நினைத்தது உடனே நடக்கும்.

salt
- Advertisement -

நாம் நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டக்கூடிய சக்தி இந்த கல் உப்புக்கு உள்ளது. கல் உப்பை கையில் வைத்துக்கொண்டு நாம், எதை எண்ணுகின்றோமோ அதுதான் நிச்சயமாக நடக்கும். உடல் அசதியாக உள்ளவர்களுக்கு உப்பு சுற்றி போடுவார்கள். உப்பு சுற்றி போடும் போது, ஊரு கண்ணு, உறவு கண்ணு, பார்த்தவங்க கண்ணு, பார்க்காதவங்க கண்ணு, நாய் கண்ணு நரிக் கண்ணு இதில் எந்த கண்ணு பட்டு இருந்தாலும், அந்த திருஷ்டி எல்லாம் போகணும் என்று சொல்லி உப்பை சுற்றி திருஷ்டி கழித்து உப்பை கொண்டுபோய் தண்ணீரில் கரைத்து விடுவார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த உப்பை சுற்றி திருஷ்டி கழித்த உடன், மாய மந்திர வித்தை போட்ட மாதிரி நம்முடைய உடல் அசதி அப்படியே நீங்கிவிடும். இது நம்மில் நிறைய பேர் அனுபவபூர்வமாக அனுபவித்த உண்மை.

epsam-salt

ஆக உப்பை நம் கையில் வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும், அது பளிக்கும் என்பதில் நமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஒரு நம்பிக்கைதான் உங்களுடைய பரிகாரம். இதை தான் காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வருகிறார்கள். சரி, இப்போது பரிகாரத்திற்கு வருவோம். உங்களுக்கு என்ன தேவையோ, அந்த தேவையை மனதில் நன்றாக நினைத்துக்கொள்ளுங்கள். கையில் ஒரு பிடி உப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வலது கை உள்ளங்கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு ‘வீண் செலவுகள் குறைய வேண்டுமா, குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டுமா, கடன் தொல்லை நீங்க வேண்டுமா, வருமானம் கிடைக்க வேண்டுமா, எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு தேவையை மட்டும் 11 முறை உச்சரிக்க வேண்டும். தேவைகளை நேர்மறையாக உச்சரியுங்கள். எதிர்மறையாக எந்த வார்த்தையும் சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டாம்.

salt

கையில் இருக்கும் உப்பை அப்படியே ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்துவிட்டு இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் கொண்டுபோய் வைத்து விடுங்கள். இன்று காலை இந்த பரிகாரத்தை செய்து, இந்த முடிச்சை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டீர்களா. மறுநாள் காலை எழுந்து பூஜை அறையில் இருந்து இந்த முடிச்சை எடுத்து அதில் இருக்கும் உப்பை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். அந்த தண்ணீரோடு 2 சிட்டிகை மஞ்சள் பொடியையும் கலந்து விடுங்கள்.

- Advertisement -

அந்த உப்பு கலந்த தண்ணீரில் நீங்கள் குளித்துவிட வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் செய்வது. தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து பாருங்கள்‌. கல் உப்பை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டினாரோ அந்த வேண்டுதல் கூடிய சீக்கிரத்திலேயே நிறைவேறும்.

bathing

இப்படி இந்த சுலபமான பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்கும். நீங்கள் இந்த கல்லுப்பு பரிகாரத்தை செய்வதன் மூலமாகத்தான் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்கிறீர்கள், என்பதை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. உங்களுக்கு இந்த சிறிய பரிகாரத்தின் மீது முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளவும்.

- Advertisement -