நினைத்தது நடக்க வாராஹி மந்திரம்

varahi
- Advertisement -

அப்படி என்ன இன்று அற்புதம் வாய்ந்த நாள். எல்லோருக்கும் இன்று தை 1 ஆம் தேதி, பொங்கல் திருநாள் என்பது தெரியும். ஆனால் இந்த நாளில் பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருக்கிறதே. அப்போது இரட்டிப்பு பலன் கிடைக்கக்கூடிய இந்த நன்னாளில், வாராகி தேவியை பற்றிய ஒரு அரிய வழிபாட்டை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஐந்து நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால், இந்த மந்திரத்தை இன்று தொடங்கி, தொடர்ந்து ஐந்து நாட்கள் சொல்லுங்கள். நிச்சயம் என்ன வேண்டுதல் வைத்து இந்த வழிபாட்டை தொடங்கினீர்களோ, அந்த வேண்டுதலானது, இந்த வழிபாட்டை செய்து முடிப்பதற்குள் நிறைவேறும்.

- Advertisement -

நினைத்தது நடக்க வாராகி வழிபாடு

இன்று மாலை 5 மணி அளவில், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, குங்கும பொட்டு வையுங்கள். இந்த மஞ்சளை வாராகித் தாய் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நிவேதனமாக கிழங்கு வகைகளை அவித்து வைக்கலாம். இல்லையென்றால் மாதுளம் பழம் நிவேதனம் வைக்கலாம்.

இல்லையென்றால் ஒரு டம்ளர் பானகம் வைத்தாலும் போதும். உங்களுடைய மனதில் ஏதாவது ஒரு கோரிக்கையை நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களுக்கான வெற்றியை கொடுக்கக்கூடிய வாராகி தாயின் மந்திரம் இதுதான். ‘அஷ்ட சித்திகள் வாராகி தாயே போற்றி போற்றி’ ஒரு வரி மந்திரம் தான்.

- Advertisement -

108 முறை இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஐந்து நாட்கள், மாலை ஐந்து மணிக்கு இந்த மந்திரத்தை சொல்லி, அந்த மஞ்சள் பிள்ளை வாராகி தாவையாக பாவித்து விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்ததை அந்த வாராகித்தாய் ஐந்தே நாளில் நிறைவேற்றி வைப்பாள். இந்த மந்திரத்திற்கு அத்தனை சக்தி உண்டு.

ஐந்து நாட்கள் கழித்து அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். மீதம் இருக்கும் தண்ணீரை வீட்டிற்கு வெளியே செடி கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள். இல்லை என்றால் மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடவும்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் பூஜை அறையில் ஒரு கருமஞ்சளை கொண்டு வந்து வையுங்கள். அந்த கருமஞ்சளை வாராகித் தாயாக பாவித்து பூஜித்து வந்தாலும் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது நடக்கும். உங்களுடைய வீட்டில் வாராஹி சிலை இருந்தால், நீங்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாராஹி தாய்க்கு விளக்கு ஏற்றி நிவேதனம் வைத்து, மேல் சொன்ன மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: தை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

நீங்கள் பூஜை செய்ய கூடிய இந்த ஐந்து நாளும் வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். மாமிசம் சாப்பிடக்கூடாது. வாராகி அன்னையை மனமுழுவதும் நினைத்துக் கொண்டே உங்களுடைய தினசரி வேலையை செய்யுங்கள். உங்களால் முடிந்த காய்கறிகளை வாங்கி பசு மாட்டிற்கு தானம் கொடுங்கள். நீங்கள் நினைத்துப் பார்க்காத திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என்ற இந்த தகவலோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -