வேண்டுதல் நிறைவேற மாசி மகம் வழிபாடு

sivan sathiya narayanar
- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய மக நட்சத்திரம் மிக மிக விசேஷமானது. அன்றைய நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவதுதான் மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாவங்கள் போக புனித நீராடல் என்னும் வழக்கத்தை நாம் பின்பற்றி வருகிறோம்.

இதுபோன்ற நாளில் நாம் எந்த வழிபாட்டை செய்தாலும் அது பலவிதமான பலன்களை நமக்குப் பெற்றுத் தரும். நாளைய தினத்தில் குறிப்பாக முருகர் வழிபாடு, சிவன் வழிபாடு போன்றவற்றை செய்யும் போது கூடுதல் பலனை பெறலாம். அத்துடன் நாளைய தினம் சத்திய நாராயணர் பூஜை செய்வது வெகு சிறப்பானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த பூஜைகளோடு சேர்ந்து நாம் செய்யக் கூடிய இந்த ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வேண்டுதலை எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேற சத்திய நாராயணர் வழிபாடு

நாளைய தினத்தில் இந்த வழிபாடை மாலை 6:00 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். அதற்கு மேல் பௌர்ணமி திதி முடிந்து விடுகிறது. பௌர்ணமி திதியில் இந்த வழிபாடு செய்யும் போது அதிக பலனை பெறலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு சத்திய நாராயணர் திருவுருவப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களிடம் படம் இல்லை என்றால் உங்களுடைய தொலைபேசியில் சத்திய நாராயணர் படத்தை வைத்து இந்த வழிபாட்டை செய்யுங்கள். சத்யநாராயணர் படம் கட்டாயமாக இந்த வழிபாட்டிற்கு தேவை.

பூஜை அறையில் இந்த சத்தியநாராயணர் படத்தை வைத்து அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து பரப்பி வைத்து விடுங்கள். இப்போது இந்த பச்சரிசியில் நீங்கள் உங்கள் வேண்டுதலை எழுத வேண்டும். உங்களுடைய தேவை எதுவோ அதை தெளிவாக இதில் எழுதுங்கள்.

- Advertisement -

இறைவனிடம் மனம் உருகி சொன்னாலே நிச்சயம் நம்முடைய வேண்டுதலை செவி சாய்ப்பார் இருந்தாலும் இது போன்ற நாட்களில் அவர்களுக்கு உகந்த பொருட்களை இந்த முறையில் வழிபாடுகள் செய்யும் பொழுது அது விரைவில் நிறைவேற கூடிய தன்மை பெறும். அப்படி ஒரு வழிபாட்டு முறை தான்.

இதுவும். அதன் பிறகு இந்த பச்சரிசியும் நாணயத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாளைய தினம் செய்யப்படும் இந்த வழிபாடானது 48 நாட்களுக்குள் அது நிறைவேறுவதற்கான வாய்ப்பை நிச்சயம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருள் கிடைக்க அரச மர வழிபாடு.

எந்த ஒரு வழிபாட்டையும் நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலனை நிச்சயம் பெறலாம். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -