பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஏலக்காய் பரிகாரம்

mahalshmi2
- Advertisement -

காசு பணம் இல்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தி, கடன் கேட்டு நிற்கும் போது தான் தெரியும் பணத்திற்கு இருக்கும் மதிப்பும், நமக்கு கிடைகக்கூடிய மதிப்பும் என்னவென்பது. பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடத்தைக் கூட, பணம் இல்லாத பசியோடு இருக்கும் வாழ்க்கை, உனக்கு பாடம் கற்றுத் தரும். ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கடனாளி ஆகாதே.

அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கி ஆடம்பரத்தை குறைத்து அழகாக வாழ்கை நடத்து. இந்த உலகத்தில் சேமிப்பு மட்டும்தான் உனக்கு நல்ல நண்பனாக இருக்க முடியும். நன்றாக வாழ்ந்து ஒருவன் கெட்டுப் போனால் அதில் வரும் வலி மரணத்தை விட ரொம்ப ரொம்ப மேலானது. இந்த விஷயத்தை எல்லாம் நீங்கள் மனதில் நிறுத்திக் கொண்டால் வாழ்க்கையில் பக்குவம் அடையலாம்.

- Advertisement -

பண பிரச்சினை இல்லாமல் வாழலாம். சரிங்க, இது நல்ல விஷயம் தான். நாம் இதை பின்பற்றலாம் தவறு கிடையாது. ஆனால் தற்போது இருக்கும் பண பிரச்சனையில் இருந்து வெளிவர ஏதாவது பரிகாரம் உண்டா. இருக்குது எளிமையான பரிகாரம், ஏழைக்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரம்.

பணக்கஷ்டத்தை தீர்க்கும் ஏலக்காய் பரிகாரம்

தினமும் வீட்டில் இருக்கும் பெண்களாக இருக்கட்டும், ஆண்களாக இருக்கட்டும் சாமி கும்பிடும் வழக்கம் இருக்கும். அந்த சமயத்தில் இறைவனிடம் நிச்சயமாக வேண்டுதல் வைப்போம். உங்களுடைய தேவைகளை இறைவனிடம் சொல்லுவீர்கள் அல்லவா. கடன் பிரச்சனை இருக்கிறது, வருமானம் இல்லை, அல்லது குடும்பத்தில் எந்தெந்த பிரச்சனைகள் இருக்கிறதோ, அதையெல்லாம் சரி செய்ய கடவுளை நீ ஒரு வழியை காட்டு என்று நிச்சயம் சாமி கும்பிடுவோம் அல்லவா.

- Advertisement -

அந்த நேரத்தில் ஒரே ஒரு ஏலக்காயை உங்கள் வாயில் போட்டு, கடவா பல்லில் அடக்கிக் கொள்ளுங்கள், அல்லது வாயில் எந்த இடத்தில் வைத்துக் கொண்டாலும் சரி, வாயில் ஏலக்காயை வைத்துக்கொண்டு இறைவனிடம் வேண்டுதல் வையுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை வையுங்கள். இப்படி ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு வேண்டிய வரத்தை கேட்டால் அந்த வரம் உடனே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஏனென்றால் ஏலக்காய்க்கு இருக்கும் வசிய தன்மை, இறை வசியத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களுடைய வேண்டுதலை இறைவனின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஏலக்காய் வாசம் செய்யும். பிரபஞ்சம் அந்த வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி தரும் என்பதும் இதில் நம்பிக்கையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரே ஒரு ஏலக்காய் தானே, தினமும் வாயில் போட்டுகிட்டு பிரார்த்தனை செய்யுங்கள். தேவைக்கான பணத்தை மட்டும் இறைவனிடம் கேளுங்கள் அந்த இறைவன் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பான். கோவிலுக்கு போறீங்க சாமி கும்பிட போறீங்க. ஒரு ஏலக்காயை வாயில் போட்டு விட்டு சாமி கும்பிடுங்களேன்.

மனதில் இருக்கும் பாரத்தை இறைவனின் பாதங்களில் இறக்கி வையுங்கள். என்ன நஷ்டம் வர போகிறது. பாதிப்பு எதுவுமே கிடையாது. ஆனால் நிச்சயம் உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வது மூலம் நன்மை நடக்கும். அதன் பிறகு வேண்டுதலை முடித்துவிட்டு அந்த ஏலக்காயை நீங்கள் சாப்பிடலாம். இல்லை என்றால் கால் படாத இடத்தில் துப்பி விடுங்கள் அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

எளிமையான சில சின்ன சின்ன பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் நம்முடைய வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றி கொடுக்கும். அப்படிப்பட்ட பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -