உங்க மணி பர்சில் எது இல்லைனாலும் இது மட்டும் கண்டிப்பா மறக்காம வச்சுக்கோங்க காசு, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

lakshmi-cash-tamil
- Advertisement -

மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் எல்லாம் இந்த ஒரு வசீகரமான பொருள் இருந்தால், பேரதிர்ஷ்டம் வரும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருள் தெய்வீக மணம் கமலும் படியாகவும் இருக்கிறது. இதை ஆன்மீக பரிகாரங்களிலும், ஆலயங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை மாலையாக கட்டி மகாலட்சுமிக்கு சாற்றி வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அப்படியான இந்த ஒரு பொருள் என்ன? இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஆன்மீகத்தில் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்த ஒரு பொருள் ‘ஏலக்காய்’. இந்த ஏலக்காய் நறுமணப் பொருளாக இருக்கிறது. இதை சமையலுக்கு பயன்படுத்தினாலும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் பெருமளவு பயன்படுத்தும் பொழுது நன்மைகளும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி சிலை அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை சாற்றி, ஏலக்காய் போட்ட தீர்த்தம் வைத்து வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள் தீரும், வருமானம் அதிகரிக்கும், இதனால் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அந்த அளவிற்கு ஏலக்காய் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தியை கொண்டுள்ளது. இந்த ஏலக்காயை ஒன்பது என்ற எண்ணிக்கையில் எடுத்து நூலில் கோர்த்து உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ளும் அளவிற்கு இடைவெளி விட்டு நூலால் கட்டி வைத்துக் கொண்டால், உங்களை பிடித்த தரித்திரம், பீடை எல்லாம் ஒழியும்! துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வர துவங்கும். கைராசி இல்லாதவர்களுக்கு கூட இதை கட்டிக் கொள்ளும் பொழுது ராசியாக இருப்பார்கள்.

இந்த ஏலக்காயை நன்கு பொடித்து, இடித்து ஒரு பாலித்தீன் கவரில் சிறிய அளவிலாக கட்டி மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பேப்பரில் கூட மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பணம் ஆனது வீண் விரயம் ஆகாமல், உங்களுக்கு தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. மணி பர்ஸ் மட்டும் அல்ல, பணம் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் நீங்கள் இது போல ஏலக்காய்களை பொடித்து வாசம் வர போட்டு வைக்கலாம்.

- Advertisement -

பீரோவில் பணத்தை வைத்தாலும் பச்சை கற்பூரத்துடன், ஏலக்காயையும் நுணுக்கி சேர்த்து வைத்தால், அந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் அதிகரிக்க துவங்கும். இதனால் பணமானது உயரும், வருமானம் ஆனது பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் கூட இது போல மகாலட்சுமி சிலைக்கு முன்பு ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் 4, 5 ஏலக்காய் நுணுக்கி போட்டு தினசரி பூஜை செய்து வந்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து வருமானம் அதிகரிக்க துவங்கும். தொழில் வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
இந்த நிற பூனை வளர்த்தால் அதிர்ஷ்டம் வருமா என்ன? இவ்ளோ நாளா இது தெரிஞ்சுக்காம போயிட்டோமே!

வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி உண்டாகும். தினமும் இந்த தண்ணீரை நீங்கள் துளசி செடிக்கு ஊற்றி, வேறு தண்ணீரை மாற்றி வைக்கலாம். துளசி செடி அல்லாதவர்கள் இதனை மற்ற செடிகளுக்கு ஊற்றி விடலாம், வீணாக்கக்கூடாது. இப்படி தொடர்ந்து ஏலக்காய்களை பணத்துடன் சேர்த்து வைத்து வந்தால் காசு, பணத்திற்கு பஞ்சமே வராது, எங்கிருந்தாவது உங்களுக்கு பணமானது தேடி வரும்.

- Advertisement -