நீங்கள் பணம் வைக்கும் இடம் இப்படி இருந்தால் பணம் சேரவே சேராது! உங்கள் பர்சில் இதை வைத்துக் கொண்டால் பணம் குறையவே குறையாது சேர்ந்து கொண்டே இருக்கும் தெரியுமா?

om-purse-cash
- Advertisement -

பணம் என்பது மகாலட்சுமியின் மறு உருவமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. சாதாரண காகிதமாக இருந்தாலும் பணத்திற்கு இருக்கும் மதிப்பு அதன் தன்மைக்கு அல்ல, அது கொடுக்கக்கூடிய விஷயத்திற்கு தான் உண்டு. கைக்கு கை மாறும் பணம் ஏன் ஒருவரிடத்தில் நிலையாக தங்குவது இல்லை? பணம் வைக்கும் இடத்தை நாம் எப்படி வைத்திருக்கக் கூடாது? எப்படி வைத்திருக்க வேண்டும்? என்கிற சூட்சம குறிப்புகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

purse

பணம் கைக்கு கை மாறினாலும் நாம் அதை எப்படி வைத்திருக்கிறோம்? என்பதை பொறுத்து தான் நம்மிடத்தில் நிலையாகத் தங்கும். மஹாலக்ஷ்மி என்பவள் அசுத்தம் நிறைந்த இடங்களில் நிச்சயம் வசிக்க மாட்டாள். எனவே நீங்கள் பணம் வைக்கும் மணிபர்ஸ், ஹேண்ட் பேக் அல்லது பீரோ எதுவாக இருந்தாலும் அந்த இடத்தை சுத்தமாகவும், வாசமாகவும் வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை பணத்துடன் சேர்த்து வைக்க கூடாது. குறிப்பாக மருந்து மாத்திரைகள், கூர்மையான ஆயுதங்கள் இருக்கவே கூடாது.

- Advertisement -

‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் இந்த பிரபஞ்சத்தின் சக்தியாக விளங்குகின்றது. ‘ஓம்’ எனும் இரண்டு எழுத்தை நீங்கள் உச்சரிக்கும் பொழுதே உங்கள் அடி வயிற்றிலிருந்து உச்சி முதல் அதிர்வுகள் உண்டாகும். அதே போல பணத்தை இந்த பிரபஞ்சத்திலிருந்து நம்மை அடைய செய்யக் கூடிய சக்தியும் இதற்கு உண்டு. நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் ‘ஓம்’ என்கிற வடிவிலான டாலர் அல்லது படம் வைத்து இருப்பது சிறப்பு.

purse-om

இது எதுவுமே உங்கள் கைகளில் இல்லை என்றால் ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய மோதிர விரலால் செவ்வாய்க் கிழமையன்று, செவ்வாய் ஓரையில் முருகன் படத்திற்கு முன்பாக குங்குமத்தை கரைத்து அதனை தொட்டு ‘ஓம்’ என்று எழுதவும். அவை காய்ந்த பின்பு நான்காக மடித்து நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் வைத்து விடுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களுடைய கல்லாப் பெட்டியில் இது போல் செய்து வைக்கலாம்.

- Advertisement -

வேலைக்கு செல்பவர்கள், மாத சம்பளம் வாங்குபவர்கள் உங்களுடைய மணிபர்சில் இதனை வைத்துக் கொள்ளலாம். இல்லத்தரசிகள் பீரோவில் பணம் வைக்கும் இடங்களில் வைக்கலாம். இப்படி உங்களுக்கு எங்கு அதிகமாக பணப்புழக்கம் இருக்கிறதோ, அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மை சுற்றியுள்ள பகைவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்க, எதிரிகளை வெல்ல, தோஷங்கள் விலக எப்பொழுதும் நம் உடம்பில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

om-ring

கைகளில் மோதிர வடிவிலோ, கழுத்தில் டாலராகவோ எந்த உலோகத்திலும் நீங்கள் அணியலாம். தங்கம், வெள்ளி என்று விலை உயர்ந்த உலோகம் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சாதாரண இரும்பு டாலர் இருந்தால் கூட போதும். உங்களுக்கு துன்பம் வரும் பொழுதெல்லாம் ‘ஓம்’ என்கிற மந்திரத்தை அமைதியாக தியான நிலையில் அமர்ந்து 108 முறை ஆழமாக உச்சரியுங்கள். ஓ.. என்கிற முதல் எழுத்து தொடங்கி ம்.. என்கிற இரண்டாம் எழுத்து முடிவதற்கு கொஞ்ச நேரம் எடுக்க வேண்டும். அந்த அளவிற்கு மூச்சை உள்ளிழுத்து, பின்னர் வெளியில் விடுங்கள். ‘ம்’ என்று நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுடைய உடம்பில் அதிர்வுகள் உண்டாகும். இந்த அதிர்வுகள் உங்களை மென்மேலும் செம்மைப்படுத்தும், இறை வழியை நோக்கி பயணிக்க செய்யும்.

- Advertisement -