எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்க வில்லையா? வரவிற்கு மீறிய செலவு வந்து கொண்டே இருக்கிறதா? உடனே செலவே இல்லாத இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் போதும்.

cash kaluppu
- Advertisement -

பணம் சம்பாதிப்பதே பெரிய போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதிக்கும் பணம் கையில் தாங்காமல் வீண்விரயங்களாக போய்க் கொண்டே இருந்தால் எப்போது தான் முன்னுக்கு வருவது. இப்படியான பிரச்சனை இன்றைய கால சூழ்நிலையில் பலரும் சந்திக்கக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து நல்ல முறையில் பணத்தை சம்பாதித்து அதை நல்ல முறையில் சேமித்து முன்னுக்கு வர ஆன்மீகம் ஒரு சில பரிகாரங்களை நமக்கு தந்திருக்கிறது. அதைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இப்படியான வீண் விரயங்களை தடுக்க நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை நமக்கு காட்டி சென்று இருக்கிறார்கள். இதையெல்லாம் இன்றைய சூழ்நிலையில் நாம் மறந்து விட்டோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நாம் வீட்டை விட்டு குடும்பமாக வெளியில் எங்காவது சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் விசேஷத்திற்கு நகைகள் அணிந்து சென்று வந்தாலோ வீட்டிற்கு வந்த உடனே பெரியவர்கள் திருஷ்டி சுற்றி போடுவார்கள். இதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

- Advertisement -

இதற்கெல்லாம் காரணம் கல்லடி பட்டால் கூட சீக்கிரத்தில் சரியாகி விடும் கண்ணாடி பட்டால் அதிலிருந்து மீளவே முடியாது என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் குடும்பமாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து இவர்களுக்கு என்ன மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும் நிம்மதி எல்லாம் அன்றோடு போய் விடும். அதே போல் நல்ல நகை நட்டுடன் சென்று இவ்வளவு நகை போட்டு இருக்கிறாரா என்றால் அதன் பிறகு அந்த நகைகளை போடவே முடியாது. இதைப் போல ஒரு திருஷ்டி தான் இந்த பணத்திற்கும் உண்டு. அதனால் தான் பலர் முன்னிலையில் பணத்தை எடுத்து எண்ணுவதோ அப்படியே கட்டாக எடுத்துக்காட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பண திருஷ்டி போக
இப்படியான இந்த பண பிரச்சனைகள் தீர்க்க நாம் பணத்திற்கு திருஷ்டி எடுக்க வேண்டும். பணத்திற்கு எப்படி திருஷ்டி எடுப்பது என்ற கேள்வி உங்களுக்குள் எழுதலாம். நீங்கள் பணம் வைக்கும் பெட்டி அல்லது நீங்கள் வாங்கிய சம்பள பணம் இதை எடுத்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். கற்பூர தீபாராதனை காட்டும் தீப கலசத்தில் கைப்பிடி அளவு உப்பை வைத்து அதன் மேல் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் வைத்து பணத்தை மூன்று முறை திருஷ்டி சுற்றுவது போல சுற்றி எடுத்து இதை வெளியில் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

பணத்தை வைத்து திருஷ்டி சுற்றுகிறேன் என்ற பெயரில் நெருப்பை பணத்தின் அருகே கொண்டு சென்று விடாதீர்கள். திருஷ்டி சுற்றும் போது மிகவும் கவனமாக பணத்தின் மீது நெருப்பு படாதவாறு சுற்றி போடுங்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்கள் கையில் இருந்து நீங்கள் பணத்தை கொடுக்கும் பொழுது யாராவது அதை பார்த்து கண் வைத்திருக்க கூடும் அல்லது இவர்களுக்கு என்ன நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்று எண்ணியிருக்க கூடும். இந்த எண்ணங்கள் கூட இது போன்ற வீண் விரயங்களையும், பணம் கையில் தாங்காமலும் போகும். இந்த சமயத்தில் திருஷ்டி கழித்தல் முறை அந்தப் பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும், தடங்கல்களும் வருகிறதா? அப்போ இந்த தீபத்தை இப்படி ஏத்தி பாருங்க. தடைகள் எல்லாம் தவிடு பொடியாகி நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்.

பணத்திற்கெல்லாம் கூடவா திருஷ்டி இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஈர்க்கும் தன்மை உள்ள ஒவ்வொன்றிற்கும் திருஷ்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நகை மனிதன் இவற்றிற்கெல்லாம் இருப்பது போல பணமும் ஈர்ப்பு தன்மை கொண்டவை தான் இந்த பணத்திற்கும் கண் திருஷ்டி நிச்சயம் ஏற்படும் அதற்கான எளிய ஒரு பரிகார முறை தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் பயன்படுத்தி பலன் அடையலாம். என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -