பண விஷயத்தில் நீங்கள் செய்யும் இந்த 1 தவறும் பணத் தடையை உண்டாக்கும்! சேமிப்பு உயர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

cash-mahalakshmi
- Advertisement -

கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்திலிருந்து சிறிதளவு சேமிக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும். சிறுக சிறுக சேமிக்கும் பணம் தான் நாளை நம்முடைய ஆசைகளை நிறைவேற்றும் திறவுகோலாக இருக்கிறது. இந்த பண விஷயத்தில் நீங்கள் செய்யும் ஒரு தவறு, பண தடையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. பணத் தடை ஏற்படாமல், சேமிப்பு உயர நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக பணத்தை ஒரே இடத்தில் நாம் வைத்திருக்க மாட்டோம். ஒரு வீட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் பணமானது மகா லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணுகிறது. இப்படி சேமிக்கும் பணத்தை ஒரு இடத்திலிருந்து எடுப்பதற்கு முன்னர் நாம் செய்யும் இந்த ஒரு தவறு பணத் தடையை உண்டு பண்ணி விடும் என்கிறது ஆன்மீகம்!

- Advertisement -

உதாரணத்திற்கு நீங்கள் வீட்டில் பீரோவில் பணம் வைத்திருப்பீர்கள். அது மட்டுமல்லாமல் உங்கள் மணிபர்ஸ், ஹேண்ட்பேக், மசாலா டப்பா, பருப்பு டப்பா, உண்டியல் என்று பல்வேறு இடங்களில் பிரித்து பணத்தை சேகரித்து வருவீர்கள். இப்படி ஒரு இடத்தில் இருந்து சேகரிக்கும் பணத்தை நீங்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக எடுக்க நினைக்கிறீர்கள், என்றால் மொத்தமாக துடைத்து எடுக்க கூடாது.

நீங்கள் சேகரிக்கும் பணத்தை அடிக்கடி எண்ணிப் பார்க்கவும் கூடாது. நீங்கள் ஒரு புறம் சேமித்து கொண்டே இருக்க அது கண்ணுக்குத் தெரியாமல் நாளுக்கு நாள் வளரத் துவங்கும். ஏதோ ஒரு அவசர தேவைக்கு நீங்கள் எடுக்கும் பொழுது, அதனை துடைத்து ஒரு ரூபாய் கூட இல்லாமல் எடுத்து விடக் கூடாது. அதில் கொஞ்சம் சில்லரை நாணயங்களை மட்டுமாவது போட்டு வைத்து மீதி பணத்தை நீங்கள் எடுத்து செலவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இப்படித் துடைத்து, வழித்து பணத்தை எடுத்தால் நிச்சயம் அங்கு பணத்தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சேகரிக்கும் உண்டியலை உடைக்கும் பொழுதும் அப்படித்தான்! சில்லறை நாணயங்கள் சிலவற்றை விட்டு விட்டு, மீதி பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும். தெய்வ விஷயத்தில் திருப்பதிக்கு செல்ல சேகரிக்கிறீர்கள் என்றால், அந்த மண் உண்டியலை உடைக்கும் பொழுது அப்படி செய்ய தேவையில்லை. உண்டியலை உடைப்பதற்கு முன்னர் புதிய உண்டியலை வாங்கி அதில் சில நாணயங்களை போட்டுவிட்டு பழைய உண்டியலை உடைத்து காசை எண்ணுங்கள்

ஆண்கள் மணி பர்சிலும், பெண்கள் ஹான்ட் பாகில் வைத்திருக்கும் பணமும் அப்படித்தான் துடைத்து எடுக்க கூடாது. அங்கு கொஞ்சம் சில்லரை நாணயங்களை விட்டுவிட்டு எடுக்கும் பொழுது மகாலட்சுமி கடாட்சம் எப்பொழுதும் பிரச்சனை இல்லாமல் நீடிக்கும். அப்படி நீங்கள் துடைத்து எடுத்து விட்டால் மகாலட்சுமியை வேண்டாம் என்று அடித்து, துரத்துவதற்கு சமம், எனவே அங்கு உங்களுக்கு பணமானது சேரவே சேராது.

சில்லரை நாணயங்களின் சத்தம் குபேரனுக்கு மிகவும் விருப்பமானது ஆகும் எனவே குபேரன் வாசம் செய்ய வீட்டில் அடிக்கடி சில்லரை நாணயங்களை சேகரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பத்து ரூபாய் நாணயங்களை சேர்த்து வந்தால், நாளடைவில் அது ஆயிரம் ரூபாயாக மாறும். ஏதோ ஒரு அவசர தேவைக்கு பயன்படும். இப்படி சேமிப்பை உயர்த்தி மஹாலட்சுமியின் அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாமே!

- Advertisement -