பண வரவை தரும் வசந்த பஞ்சமி வழிபாடு

vasantha panjami vazhiapdu
- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதியில் தான். இந்த பஞ்சமி திதியானது வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என வாரத்தில் இரண்டு முறை வரும். அது வரக்கூடிய நாளை பொறுத்து அதற்குரிய பலனும் மாறும். இந்த முறை பஞ்சமி திதியானது வளர்பிறையில் வந்திருக்கிறது அதுவும் இந்த பஞ்சமி பல விசேஷங்களை கொண்டதாக உள்ளது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.35 மணிக்கு தொடங்கி நாளைய தினம் புதன்கிழமை மாலை 6.30 மணி வரை உள்ளது. இன்றைய தினம் மாசி மாதத்தின் முதல் நாள். இதை விஷ்ணுபதி காலம் என்று சொல்லுவார்கள். இன்றைய தினத்தில் வந்திருக்கக் கூடிய பஞ்சமி திதியும் வெகு விசேஷமானது. இந்த நாளில் பஞ்சமி திதி வழிபாட்டோடு பெருமாள் வழிபாடை செய்யும் பொழுது நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

அதே போல் நாளைய தினம் மாசி மாதத்தின் புதன்கிழமையில் வந்திருக்கக் கூடிய இந்த திதியானது வசந்த பஞ்சமி என்று சொல்லுவார்கள். இந்த தினத்தில் சரஸ்வதி தாயாரை உடன் சேர்த்து வணங்குவது நல்ல பலனை கொடுக்கும். இன்றைய தினத்தில் இந்த வழிபாடு செய்பவர்கள் இரவு எட்டு முப்பது மணிக்கு மேல் தாராளமாக செய்யலாம். நாளைய தினத்தில் இந்த வழிபாடு செய்வதாக இருந்தால் மாலை ஆறு முப்பது மணிக்குள்ளாக செய்து விடுங்கள்.

பண வரவிற்கு பஞ்சமி திதி வழிபாடு
இந்த வழிபாடு செய்வதற்கு வாராகி அன்னையின் திருவுருவப்படம் அல்லது சிலை இருந்தால் அதை வைத்து செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஐந்து முகம் கொண்ட ஒரு பஞ்ச தீப விளக்கை ஏற்றி வைத்து அதையே வாராகி அன்னையாக பாவித்தும் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வாராகி அன்னைக்கு செவ்வரளி அல்லது செம்பருத்தி மாலை சூட்டுங்கள். விளக்கு என்றால் பூக்களை விளக்கின் முன்பாக வைத்து விடுங்கள். நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள், மாதுளை முத்துக்கள் பானகம் இவைகளை வைக்கலாம். அடுத்து ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். இது காம்புடன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சிறு ஓட்டையோ பழுப்பு நிறமுமோ இருக்கக் கூடாது.

வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வாராகி அன்னை முன்பாக வைத்து விடுங்கள். அதில் 5 ரூபாய் நாணயம், 2 ஏலக்காய், 2 கிராம்பு, சிறிய துண்டு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு வெள்ளை நிற நூலில் கொஞ்சம் மஞ்சள் தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த வெற்றிலையை இந்த நூலால் சுற்றி ஐந்து முடிச்சுகள் போட்டு பொட்டலம் போல கட்ட வேண்டும். இதில் ஐந்து முடிச்சு போட வேண்டும் அது மிகவும் முக்கியம். அதே போல் வெற்றிலையில் இருந்து இந்த பொருட்கள் விழக் கூடாது. அதற்கு ஏற்றார் போல் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.

இந்த முடிச்சை வராகி அன்னையின் பாதத்தில் வைத்து உங்களுடைய பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் ஓம் வாராகியே போற்றி என்ற இந்த நாமத்தை சொல்லுங்கள். அதன் பிறகு இந்த வெற்றிலை முடிச்சை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை கிடையாது. நன்றாக காய்ந்து இதன் வாசம் எல்லாம் போன பிறகு புதன்கிழமையில் முடிச்சை கட்டி வாராகி அன்னை முன்பாக வைத்து வணங்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டு முறை மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் பண ஈர்ப்பை சேர்த்துக் கொடுக்கக் கூடியது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

மகாலட்சுமி தாயார், குபேரர் இவர்களுடைய அனுகிரகத்தையும் பெற்றது. இவை அனைத்தும் சேரந்து செய்யக் கூடிய இந்த பரிகாரம் பண வரவிற்கான நல்லதொரு பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறலாம்.

- Advertisement -