பெண்கள் இப்படி போட்டு வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி, யாராலும் வெல்ல முடியாத ஆளுமையுடன் செல்வாக்குடனும், மதிப்புடனும் வாழ வைக்கும் அற்புத திலகம்.

god pottu
- Advertisement -

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதை ஒரு அழகியல் சார்ந்த விஷயமாக மட்டுமே பார்த்து வருகிறார்கள். இந்த பொட்டை சரியான முறையில் வைத்து பயன் படுத்தினால் அழகியலோடு சேர்த்து வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ வளங்கள் சேர்வதுடன், சமூகத்தில் அவர்களுக்கான ஒரு அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொள்ள இந்த பொட்டுக்கு பெரும் பங்கு உண்டு. அது என்ன எப்படி என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் முறை:
பெண்கள் நெற்றியில் எப்போதும் வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. அதில் திலகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் இப்பொழுது கடைபிடிக்கும் பழக்கம் மட்டும் கிடையாது. நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பழகிய ஒரு செயல். பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது என்பது வெறும் அழகிற்காக மட்டுமல்ல, பிறரிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஒரு ஆயுதமாகவே ஒரு காலத்தில் அந்த பொட்டை பயன்படுத்தி வந்தார்கள்.

- Advertisement -

இப்போது வைப்பது போல் அந்த பொட்டை கண்ணுக்கே தெரியாத அளவிற்கு எல்லாம் அவர்கள் வைத்ததில்லை. பெண்களின் இரண்டு புருவங்களுக்கு இடையில் இருக்கும் மைய புள்ளியை வைத்து பல தீய செயல்கள் செய்யலாம். ஆகையால் தான் அந்த காலத்தில் இரு புருவங்களுக்கும் இடையில் அதை மறைக்கும் விதமாக பெரிய பொட்டு வைத்து வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இரண்டு புருவங்களுக்கு இடையில் நாம் பொட்டை வைக்கும் போது விரலை கொண்டு வட்டம் ஆக வைத்து சுழற்றுவோம். இந்த சுழற்சியானது நம் உருவங்களுக்கு இடையே உள்ள நாளங்களை தூண்டும். இதன் மூலம் மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்து நம் உடல் ஆரோக்கியத்தையும் இந்த பொட்டு காக்கும்.

- Advertisement -

பொட்டு வைக்கும் முறையில் இன்னொரு விசேஷசமும் உண்டு, நாம் மோதிர விரல், கட்டை விரல் என இரண்டு விரல்களால் பொட்டு வைக்கும் போது, இரண்டு புருவங்களுக்கிடையில் அதே போல் விரலை வைத்து சுழற்றும் போது பெண்களின் ஆளுமை திறன் பல மடங்கு உயரும். எல்லா இடத்திலும் நம்முடைய ஆளுமை திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த முறையில் பொட்டு வைத்து வந்தால் நிச்சயம் அவர்கள் இருக்கும் இடத்தில் ஆளுமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அது ஒரு நிர்வாகமாக இருக்கட்டும் அல்லது வீடாகட்டும் அதை அவர்கள் வழிநடத்தக் கூடியவர்களாக தான் இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியை வீட்டில் மகாராணி போல் அமர வைக்க

உங்கள் அனுபவத்தில் இப்படி பொட்டு வைத்து இருப்பவர்களை கொஞ்சம் நினைவுகூர்ந்து பார்த்தால் உங்களுக்கே அது புலப்படும். இப்படியானவர்களை பார்க்கையில் அனைவருக்கும் ஒரு வித மரியாதை இயற்கையாகவே ஏற்படும். அதுமட்டும் இன்றி அப்படி பொட்டு வைக்கும் பெண்கள் வீட்டில் தெய்வ சக்தியும் நிறைந்து இருக்கும். ஒரு பொட்டுக்கு பின்னால் இருக்கும் இத்தனை பெரிய விஷயம் இதுவரை தெரியாமல் இருந்தாலும் இனி தெரிந்து கொண்டு அதை பின்பற்ற முயற்சி செய்யலாமே.

- Advertisement -