மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும். எதிர்பாராத பண வரவு தாராளமாக ஏராளமாக வரும்.

mahalakshmi
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மகாராணி யார் தெரியுமா. அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான். பெண்களாக இருக்கும் மனைவி, மகள், அம்மா, அக்கா, தங்கை, இப்படி யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்துங்கள். உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிச்சயமாக வந்து நிரந்தரமாக அமர்ந்து கொள்வாள். எந்த வீட்டில் பெண்களை இழிவாக நடத்துகிறீர்களோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி தங்க மாட்டாள். இது நிதர்சனமான உண்மை. உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண்களை மகாலட்சுமியின் சொரூபமாக பார்த்து, பின் இந்த ஆன்மீகம் சார்ந்த பூஜையை செய்யும் போது பலன் பல மடங்காக உடனடியாக கிடைக்கும்.

பெண்களை மதிக்க வேண்டும். பெண்களுக்கு உண்டான உரிமையை கொடுக்க வேண்டும் என்று எதற்காக சொல்கிறோம் தெரியுமா. சில வீட்டில் பெண்களே, இன்னொரு பெண்ணுக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. அப்படி இருக்கும் போது என்னதான் பூஜை புனஸ்காரங்களை செய்து விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் தாங்காது.

- Advertisement -

மகாலட்சுமியை வீட்டில் மகாராணி போல் அமர வைக்க:
பரிகாரத்தை பார்த்து விடுவோம். ஸ்வஸ்திக் சின்னம். நான்கு திசையிலிருந்து நன்மையை நமக்கு கொண்டு வந்து சேர்க்கக்கூடிய சின்னம். பசு நெய், மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருள். மண் அகல் விளக்கு, பஞ்சபூதங்களின் கலவை. வாசனை நிறைந்த பூக்களுக்கு மகாலட்சுமி மயங்கி விடுவாள். இல்லையென்றால் ஒரே ஒரு தாமரை பூ வாங்கிக் கொள்ளுங்கள்.

வியாழக்கிழமை இந்த விளக்கை ஏற்ற வேண்டும். உங்களுடைய பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கும் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அரிசி மாவில் கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து, மஞ்சள் நிறமாக மாற்றிக் கொள்ளுங்கள். அந்த மஞ்சள் அரிசி மாவில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதன் மேலே மண் அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி, அதில் மூன்று டைமண்ட் கற்கண்டு போட்டு, திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அந்த விளக்கிற்கு முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். கையில் குபேர முத்திரையை வைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு மகாலட்சுமியிடம் பிரார்த்தனை வையுங்கள். உங்களுக்கு பணவரவு நிறைய இருக்கிறது. எதிர்பாராத பிரச்சனைகள் எல்லாம் தீருவதற்கு வழி கிடைத்துவிட்டது. கடன் இல்லை, வாங்கிய கடனை எல்லாம் முழுசாக திருப்பிக் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் ஒரு செல்வந்தர்களாக வாழ்வதாக நினைத்து இந்த குபேர முத்திரையை கையில் பிடித்துக் கொண்டு, மகாலட்சுமிக்கு பூஜை செய்து இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

மாதுளை பழம் கிடைத்தால் அதன் முத்துக்களை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேதியமாக வைத்து அதை நீங்கள் சாப்பிடுவது இன்னும் இன்னும் சிறப்பு. வியாழக்கிழமை இந்த பூஜையை தொடர்ந்து மனப்பூர்வமாக செய்து வந்தால், 48 வியாழக்கிழமை முடிவதற்குள் நீங்கள் நிச்சயம் செல் வந்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லையில் சிக்கி சின்னாபின்னமானவர்கள், எப்படியாவது இந்த 1 விலங்கை உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும். கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவரலாம்.

செல்வந்தர்கள் என்றால் கோடி கோடியாக பணமழை கொட்டும் என்பது கிடையாது. பணக்கஷ்டம் இல்லாமல், கடன் சுமை இல்லாமல், அளகான வருமானத்தோடு, நோய் நொடி இல்லாமல், நிம்மதியான வாழ்க்கையை வாழக்கூடியதுதான் நிறைவான செல்வம். அந்த இடத்தில் மகாலட்சுமி மகாராணி போல அமர்ந்து கொண்டிருக்கிறாள் என்பது தான் அர்த்தம். நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த பூஜையை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -