திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து அந்த பெருமாளே உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து வைப்பார். இந்த 1 பொருளின் வாசம் உங்கள் வீட்டில் நிறைவாக இருந்தால்.

perumal
- Advertisement -

எவ்வளவு பெரிய பெரிய பண கஷ்டத்தை கூட சுலபமாக ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவர் தான் பெருமாள். அவருடைய கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் போதும். பொன் பொருள் சொத்து சுகம் அனைத்தும் நம்மை தேடி வந்துவிடும். எந்த ரூபத்தில் அதிர்ஷ்ட காற்று நமக்கு வீசிது என்று நமக்கே தெரியாது. ஆனால் வறுமை பின்வாசல் பக்கம் சென்று இருக்கும். மகாலட்சுமி முன் வாசல் பக்கமாக வீட்டிற்குள் வந்து கொண்டே இருப்பாள். அந்த பெருமாளின் ஆசிர்வாதத்தை வாங்க தினம் தினம் நாம் பெருமாள் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும்.

பெருமாள் வழிபாட்டில் அதிகப்படியாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பொருள் என்றால் அது பச்சை கற்பூரம். பெருமாள் கோவிலில் பெருமாளுக்காக செய்யக்கூடிய பிரசாதத்திலிருந்து அவருக்கு வைக்கக்கூடிய தீர்த்தம் வரை பச்சை கற்பூரமானது சேர்க்கப்படும். ஒருவருடைய வீட்டில் பச்சைக் கற்பூரம் எந்த அளவில் புழக்கத்தில் இருக்கிறதோ அந்த வீட்டில், அந்த பச்சைக் கற்பூரத்தின் வாசத்திற்காகவே பெருமாள் விரும்பி வாசம் செய்வார். பச்சைக் கற்பூரத்தின் வாசம் நிறைந்திருக்கும் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது. பச்சை கற்பூரத்தை வாங்குவதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்றீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு இருட்டிப்பு மடங்கு வருமானம் அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த பச்சை கற்பூரத்தை வீட்டில் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம், இரண்டு துளசி இலைகளை போட்டு இந்த தீர்த்தத்தை பெருமாளின் பாதங்களில் வைத்து விட வேண்டும். தினம்தோறும் இந்த தீர்த்தத்தை பெருமாளுக்கு முன்பு வைத்துவிட்டு, உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மறுநாள் இந்த தண்ணீரை செடியில் ஊற்றிவிட்டு மீண்டும் புதிய தண்ணீரை வைத்து பிரார்த்தனை செய்து வர வேண்டும்.

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் சாதாரண கற்பூரத்தை ஏற்றி ஆராதனை காண்பிப்பீர்கள் அல்லவா. அதற்கு பதில் இந்த பச்சை கற்பூரத்தை ஏற்றியும் இறைவனுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கலாம். உங்களுடைய வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் எப்போதுமே இந்த பச்சை கற்பூரம் குறையாமல் இருக்க வேண்டும். பச்சைக் கற்பூரத்தை வைத்த ஒரு சில நாட்களில் அது காற்றில் கரைந்து விடும். அது கரைவதற்கு முன்பாக, அதில் இருக்கும் வாசனை குறைவதற்கு முன்பாகவே மீண்டும் புதியதாக பச்சை கற்பூரத்தை வாங்கி பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். வரவேற்பு அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு வைத்தால் அந்த வாசம் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். நிலை வாசலில் ஒரு சிறிய அகல் விளக்கில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு வைத்தால் உங்களுடைய வாசல் பகுதியும் வாசமாக இருக்கும். மகாலட்சுமி வீட்டிற்குள் விரும்பி வருவாள்.

- Advertisement -

வாரம் ஒரு முறை சனிக்கிழமை மற்றும் புதன்கிழமையில் ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் செய்ய வேண்டும். அந்த இனிப்பு பலகாரத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்யுங்கள். இதை நிவேதனமாக பெருமாளுக்கு வைத்து, ஒரு தீபம் ஏற்றி வைத்து, பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலும் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் படிப்படியாக குறையும். (சாப்பிடக்கூடிய பலகாரத்தில் நிறைய பச்சை கற்பூரத்தை போட்டு விட்டால் அதை சாப்பிட முடியாது. மிகக் குறைந்த அளவு தான் பச்சைக் கற்பூரம் சேர்க்க வேண்டும்.)

உங்களால் முடிந்தால் உங்கள் வருமானத்தில் ஒரு பங்கை பெருமாளுக்கு செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நீங்கள் சம்பாதிப்பதாக இருந்தால், அதில் ஒரு 100 ரூபாயை பெருமாளுக்கு செலுத்தி அவரை உங்களுடைய பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வருமானத்தை அவர் எப்படி பல மடங்கு பெருக்கி தருகிறார் என்பதை கூடிய சீக்கிரத்தில் நீங்களே உணர்வீர்கள்.

நிறைய பேருக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. தாங்கள் செய்யக்கூடிய தொழிலில் பெருமாளையும் ஒரு பார்ட்னராக வைத்து வரக்கூடிய லாபத்தை இன்றளவும் கோடி கோடியாக பக்தர்கள் திருப்பதி பெருமாள் கோவில் உண்டியலில் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையோடு இந்த விஷயத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய லாபமும் பல மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -