மல்லிகை பூவை வைத்து இப்படி செய்தால் போதும். நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபகரமாக மாறும். வீட்டில் தங்கு தடை இன்றி பணம் வந்துகொண்டே இருக்கும்.

malligai panam
- Advertisement -

படித்தவர்களும், படிக்காதவர்களும் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பார்கள். தொழில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நபரும் தங்கள் தொழிலில் லாபம் பெருக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். லாபம் பெருக முயற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் பரிகாரங்களையும் நம் முறையாக செய்யும் பொழுது கடவுளின் அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைத்து தொழிலில் நாம் வெற்றியை நிலைநாட்டுவோம். அந்த பரிகாரம் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாம் செய்யும் தொழிலிலோ அல்லது வீட்டிலோ ஏதேனும் பணத்தடைகள் ஏற்பட்டு இருப்பின், நம் தொழிலில் நம்மால் லாபத்தை ஈட்ட முடியாது. அதையும் தாண்டி பணத்தை ஈட்டினாலும், அது நம் வீட்டில் நிலைத்து நிற்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை விட்டு அது வெளியேறி கொண்டே தான் இருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் பரிகாரங்களை மட்டுமே நம்பியாக வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் செய்வதால் நம் தொழிலில் நமக்கு நல்ல லாபம் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகத்தை பரிபூரணமாக பெற்றதாக நாம் கருதுவது தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள். இந்த பொருட்களை நாம் மகாலட்சுமியாக பாவித்து பூஜை செய்ய போகிறோம். இந்த பூஜைக்கு நமக்கு வாசனை மிகுந்த பன்னீரும், மல்லிகை பூவும் தேவைப்படும். மல்லிகை பூ உதிரியாக இருக்க வேண்டும். பிறகு வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமமும், சந்தனமும் தேவைப்படும். சந்தனம் வில்லையாக இல்லாமல் பவுடராக இருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டும். ஆதலால் இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு வேலை ஒரு தடையாக இருக்காது. ஞாயிற்றுக்கிழமை காலையில் எப்போதும் போல் நாம் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுது இந்த பூஜையையும் சேர்த்து மேற்கொள்ளலாம். பூஜை அறையில் சாமி படங்களுக்கு முன்பாக ஒரு தாம்பாலத்தை வைக்க வேண்டும். அந்த தாம்பாளத்தில் பன்னீரை ஊற்ற வேண்டும். பிறகு உதிரியான மல்லிகை பூக்களை அதில் போட வேண்டும். நடுவில் நாம் தங்கத்தையும், வெள்ளியையும் வைக்க வேண்டும். அவை நாணயங்களாக இருந்தாலும் சரி, நகைகளாக இருந்தாலும் சரி. நாம் உபயோகப்படுத்திய பொருட்களாக இருந்தால் அதை பன்னீரில் சுத்தமாக கழுவிய பிறகு அதில் வைக்க வேண்டும்.

- Advertisement -

மற்றொரு தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு, அதில் தாழம்பூ குங்குமத்தையும், சந்தனத்தையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் இந்த குங்குமத்தையும், சந்தனத்தையும் அந்த தங்க வெள்ளி உலோகத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஸ்ரீம் ஓம் லம் லாபம் ஸ்வாஹ” என்று 108 முறை கூறியவாறு அர்ச்சனை செய்ய வேண்டும். அன்று முழுவதும் அந்த தங்கமும், வெள்ளியும் அந்த தாம்பாளத்திலேயே இருக்க வேண்டும். மறுநாள் நாம் அந்த தங்கம் வெள்ளியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நாணயமாக இருந்தால் பூஜை ரூமிலேயே வைக்கலாம் அல்லது பீரோவிலும் வைக்கலாம். பன்னீர், மல்லிகைப்பூ, அர்ச்சனை செய்த குங்குமம் சந்தனத்தை கால் படாத இடங்களில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போக கந்தக் கடவுளுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். கடன் சுமையானது கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய் விடும்.

இவ்வாறு நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வருவதால், நமக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அவளின் அருள் பரிபூரணமாக கிடைப்பதால் நம் வீட்டில் எந்தவித தங்கு தடை இல்லாமல் பணம் நிலைத்து நிற்கும். தொழிலில் லாபம் பெருகும்.

- Advertisement -