தைத்திருநாள் அன்று கண் விழிக்கும் போது பார்க்க வேண்டிய பொருட்கள்

pongal2
- Advertisement -

இந்த தைப்பொங்கல் திருநாள் 15-1-2024 ஆம் ஆண்டு நாளைய தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. தை 1 திங்கட்கிழமை பிறக்கின்றது. தை மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை முடிவடைகின்றது. தை மாதம் திங்கட்கிழமை அன்று தொடங்கி, திங்கட்கிழமை அன்றே முடிவதால் இந்த தை மாதம் நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வருடம் பிறக்கவிருக்கும் தை ஒன்றாம் தேதி, காலையில் கண்விழித்ததும் இந்த மங்களகரமான பொருட்களை பாருங்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் குடும்பத்தில் சுபிட்சம் நிறைவாக இருக்கும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்காமலும் இருக்கும். அடுத்த வருடத்தை சிறப்பாக மாற்றப் போகும் இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த குறிப்புகள் பயணம் செய்வோமா.

- Advertisement -

மங்களகரமான பொருட்கள் என்று பட்டியலிட்டால் அதன் வரிசை பெருசா இருக்கும். நம் வீட்டிற்கும் நமக்கும் சுபிட்சம் தரக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளது. அதை சுருக்கி குறிப்பிட்ட ஒரு ஐந்து பொருட்களை மட்டும் இன்று நாம் பார்க்கலாம். கல் உப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி நெல், விராலி மஞ்சள், 1 ரூபாய் நாணயம்.

இந்த ஐந்து பொருட்களில் ஏதாவது ஒரு பொருளில் கண்விழித்தாலும் நல்லது தான். ஆனால் ஒரு தாம்பல தட்டில் சின்ன சின்ன கிண்ணத்தில் இந்த ஐந்து பொருட்களையும் போட்டு காலை எழுந்தவுடன் இந்த பொருட்களை பார்க்கும்போது நமக்கு ஒரு மனநிறைவு ஏற்படும். ஒரு மங்களகரமான சூழல் நம்முடைய கண்களில் நிறைவாக இருக்கும். இந்த ஐந்து பொருட்களுமே நம்முடைய வீட்டின் எல்லா வகையான சுபிட்சத்தையும் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கி வைத்துள்ளது.

- Advertisement -

கல் உப்பு மகாலட்சுமி அம்சம். துவரம் பருப்பு செவ்வாய் பகவான். பணம் காசு வீடு திருமணம் எல்லாவற்றையும் இவர் தான் கொடுக்கணும். பச்சரிசி நெல், தன தானியத்திற்கு முதலிடத்தில் இருப்பது. 1 ரூபாய் நாணயம் காசு பணத்துக்கு எல்லாம், நகை எல்லா வற்றிர்க்கும் முதலிடத்தில் இருப்பது. விரலி மஞ்சள் மங்கலத்தை கொடுப்பது. கிருமி நாசினி ஆரோக்கியத்தை கொடுப்பது. இந்த ஐந்தும் ஒரு சேர நமக்கு இந்த வருடம் கிடைக்க வேண்டுமென்றால் இந்த ஐந்து பொருட்களை முதலில் பாருங்கள்.

இது தவிர உங்களுக்கு வேறு என்னவெல்லாம் இந்த வருடம் அதிகம் சேர வேண்டும். தங்கம் சேர வேண்டுமா, வெள்ளி சேர வேண்டுமா, அதையும் இந்த தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் ஒரு புத்தகத்தை இந்த தாம்பூல தட்டில் வைத்து காலையில் கண் விழிக்கலாம். உங்களை உங்களுக்கே ரொம்ப பிடிக்குமா.

- Advertisement -

ஒரு கண்ணாடியை வையுங்கள். காலையில் எழுந்து உங்களுக்கு பிடித்த, அழகான உங்க முகத்தை அந்த கண்ணாடியில் பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். இது தவிர உங்களுக்கு என்ன இஷ்டமோ, அந்த பொருளை இந்த தாம்பூல தட்டில் வைத்து தை 1ம் தேதி பிறந்தவுடன், உங்கள் கண்கள் விழித்த உடன் இந்த பொருட்களில் கண் விழிக்கும் போது, உங்கள் மனது தானாக சந்தோஷம் பெறும்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது தோஷம் நீங்க மந்திரம்

அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமாக செல்லும். அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியடையலாம். இதே சந்தோஷம் இந்த வருடம் முழுவதும், இந்த யுகம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற தகவலுடன் இந்த எளிமையான ஆன்மீகம் பரிகார பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -