எத்தனை முறை படித்தாலும்
புரியாத புதிராகவே உள்ளது
அவள் பார்வையின் அர்த்தங்கள்..
இதையும் படிக்கலாமே:
ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை
பெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும் முடியாது. பெண்களின் மனது கடல் போன்றது அதை அறிய யாராலும் முடியாது என்பார்கள் அது போல தான் அவர்களின் பார்வையும். சில நேரம் அன்பையும் சில நேரம் கோபத்தை அவர்கள் பார்வையாலே வெளிப்படுத்துவர். ஆனால் அவர்களின் மௌன பார்வை எதை சொல்கிறது என்று நமக்கு புரியாது.
பெண்களின் உதடுகள் ஆயிரம் வார்த்தைகள் பேசலாம் ஆனால் அதே சமயம் அவர்களின் கண்கள் வேறு சில வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கும். ஆகையால் பெண்களிடம் முன்பாகவோ அல்லது கோவமாகவோ பேசுகையில் அவர்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களின் கண்கள் மீது கவனம் செலுத்துவதே ஆண்களுக்கு நல்லது. ஏன் என்றால் சில நேரங்களில் அவர்களின் உதடுகள் ‘இல்லை’ என்று சொல்லும் ஆனால் அவர்களின் கண்கள் ஆம் என்ற சொல்லும். இதற்க்கு நேர்மறையாகவும் சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடக்கும்.
மேலும் பல காதல் கவிதைகள், காதல் மெசேஜ் மற்றும் காதல் தோல்வி கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.