ரோட்டு கடை காளான் மசாலாவை அதே சுவையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்

mushroom-masala
- Advertisement -

காளான் மசாலா தெருவோர கடைகளில் மிகவும் சுவையாக கிடைக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அதனை மாலை நேர சிற்றுண்டியாக விரும்பி உண்பார்கள். இது காளான், முட்டைகோஸ் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. சுவையான காளான் மசாலாவை ரோட்டுகடை சுவையில் சுலபமான முறையில் வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :
காளான் – 100g, முட்டைக்கோஸ் – 50g, வெங்காயம் – 1/4  கப்,  அரிசி மாவு –  3 ஸ்பூன், மைதா மாவு –  3 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது –  1 ஸ்பூன், மிளகாய் தூள் –  2 ஸ்பூன், மல்லித்தூள் –  1 ஸ்பூன், கரம் மசாலா –  1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் –  1 சிட்டிகை,  உப்பு –  1 1/2 ஸ்பூன், சமையல் எண்ணெய் – 250 g, பூண்டு பற்கள் – 5, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய வெங்காயம் – 1/4  கப், இஞ்சி பூண்டு விழுது – 1  ஸ்பூன், தக்காளி – 1, டொமேட்டோ சாஸ் – 2  ஸ்பூன், சோயா சாஸ் –  1/2  ஸ்பூன், கான்பிளவர் – 1/2  ஸ்பூன், கொத்தமல்லி –  சிறிதளவு.

- Advertisement -

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் காளான் மற்றும் 50 கிராம் முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் கால் கப் அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். 3 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 3 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,  1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மல்லித் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா, 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர்  தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மசால் வடைக்கா பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். அதனை சிறிது சிறிதாக உருட்டி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சற்றுக் கூடுதலாக வைத்து தயார் செய்து வைத்துள்ள காளான் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் 5 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

- Advertisement -

சுருண்டு வரும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,  1 ஸ்பூன் மிளகாய் தூள்,  1/2 ஸ்பூன் மல்லித்தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு,  2 ஸ்பூன் தக்காளி சாஸ்,  1/2 ஸ்பூன் சோயா சாஸ் எடுத்துக் கொள்ளவும். 1/2 ஸ்பூன் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி அதனை மசாலாவுடன் சேர்த்து கலக்கவும். அதனுடன் 5 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். சுருண்டு வரும் வரை வதக்கி கொள்ளவும்.  அதனுடன் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கிய பின்னர் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,  1 ஸ்பூன் மிளகாய் தூள்,  1/2 ஸ்பூன் மல்லித்தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு,  2 தேக்கரண்டி தக்காளி சாஸ்,  1/2 தேக்கரண்டி சோயா சாஸ் எடுத்துக் கொள்ளவும். 1/2 தேக்கரண்டிசோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி அதனை மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

- Advertisement -