சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை தெரிந்து கொண்டாலே பண கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும். பரிகாரத்தை செய்யும்போது பணம் பல வழிகளில் வந்து குவியத் தொடங்கும்.

perumal
- Advertisement -

சனிக்கிழமை அன்று பெருமாளை மனதார நினைத்து, பெருமாளின் நாமத்தை வாயார உச்சரித்து, பணக் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என்று மனதார நினைத்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பிறகு எதற்காக பரிகாரங்கள் என்று நிச்சயமாக அடுத்த கேள்வி வரும். என்னதான் இறைவழிபாட்டை நாம் மனதார மேற்கொண்டாலும் நம்முடைய கர்ம வினைகளின் மூலம் நாம் செய்த பலாபலனை அனுபவித்தே ஆக வேண்டும். கிரகங்களின் சூழ் நிலை சரியில்லாத சமயத்தில், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கும் போது, சில பரிகாரங்கள் நமக்கு கைமேல் பலன் தரும் என்பது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.  பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்களுக்கு அது நிச்சயமாக புரியும். பரிகாரத்தை முழுமையாக செய்தாலும், வரக்கூடிய கஷ்டம் பாதி குறையுமே தவிர, கஷ்டமே இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்று யாரும் சொன்னதில்லை.

பண பிரச்சனைக்கு தீர்வு பெற சொல்லப்பட்டுள்ள பரிகாரங்கள் ஏராளம். எல்லா பரிகாரங்களும் எல்லோருக்கும் பலனை தருவதற்கு வாய்ப்பு இல்லை. சில பரிகாரம் சிலருக்கு பலன் கொடுக்கும். சில பரிகாரம் சிலருக்கு பலன் தரவே தராது. அந்த வரிசையில் ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்கிய, சில நாட்களிலேயே உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கும். அப்படி இருக்கும்போது அந்த குறிப்பிட்ட பரிகாரத்தை நீங்கள் கைவிட கூடாது. உங்களுக்கு நன்மை தரக்கூடிய பரிகாரத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது.

- Advertisement -

சரி, இப்போது பரிகாரத்தை பார்த்துவிடுவோம். சனிக்கிழமை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் லட்சுமி நரசிம்மர் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். காலையில் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு, அங்கு இருக்கும் லட்சுமி நரசிம்மரின் சன்னிதானத்தில் 16 நெய் தீபங்கள் ஏற்றவேண்டும். மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று லட்சுமி நரசிம்மரை வேண்டிக் கொண்டு, கோவிலிலேயே பத்து நிமிடங்கள் அமர்ந்து மனதார தியானம் செய்யுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.

உங்களுடைய வீட்டின் அருகில் லட்சுமி நரசிம்மர் கோவில் இல்லை என்றால், வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு எந்த கோவிலில் அரசமரம் இருக்கின்றதோ, அதையும் கொஞ்சம் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பரிகாரம் செய்து முடித்தவுடன், அதாவது பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நேராக அரசமரம் உள்ள கோவிலுக்கு சென்று அந்த அரச மரத்தை 54 முறை அல்லது 108 முறை வலம் வரவேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து 5 வார சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள், பண பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை. ஆனால் வீட்டில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. கைக்கு வந்துகொண்டிருந்த வருமானத்திற்கு கூட பிரச்சனை.

நிறைய பரண சிக்கல்கள் உள்ளது என்றால், உடனடியாக ஒரு சிவப்பு நிறத் துணியில் 101 ரூபாயை வைத்து முடிந்து உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். அவசர பண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இந்த ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் என்றும் நம்மை கைவிட்டாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -