வியாபார ஸ்தலங்களில் கல்லாப்பெட்டி நிரம்பி வழிய நெல்லை இதில் போட்டு வைத்து விடுங்கள். நெல் முளைத்து பெருகுவது போல உங்கள் கல்லாப் பெட்டியிலும் பணம் பெருகி கொண்டே இருக்கும்.

- Advertisement -

போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு தொழிலை நடத்தி அதில் முன்னேற்றம் காண்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் எவ்வளவு தான் பாடுப்பட்டு உழைத்தாலுமே கூட ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை வந்து கொண்டே இருக்கும். அது நம்முடைய கிரக ஜாதக நிலைகளாலும் இருக்கலாம். அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களாலும் இருக்கலாம். எந்த காரணத்தினால் உங்கள் தொழில் மந்தப்பட்டு இருந்தாலும் அதை மேன்மேலும் பெருக்க இந்த தாந்த்ரீக பரிகாரம் பெரிதும் உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடை வீடுகளில் பணப்பெட்டி நிறைந்து வழிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு உங்களால் முடிந்தால் வெள்ளியினால் ஆனா ஒரு சிறிய மூடி போட்ட டப்பாவை வாங்க முடியும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்க முடியாதவர்கள் ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மேலே 3 கண்கள் இருக்கும் அல்லவா அதில் ஒரே ஒரு கண் இருக்கும் இடத்தில் மட்டும் துளையிட்டு தண்ணீர் முழுவதையும் கீழே கொட்டி விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அவிக்காத நெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நெல்லை எடுப்பதில் தான் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதில் 709 நெல் மணிகளை நாம் சரியாக எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு சிகப்பு நிற துணியும், ஒரு சிறிய கட்டை துண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டை தேங்காயின் துளையை மூடுவதற்கு சரியாக இருக்கும்படி பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் எடுத்துக் கொண்டு உங்கள் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். தேங்காயின் துளையிட்ட பகுதியில் ஒவ்வொரு நெல்லாக போடுங்கள். நெல்லை முதலில் எண்ணி வைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் நீங்கள் நெல்லை துளைக்குள் போடும் போது உங்கள் தொழில் முன்னுக்கு வர வேண்டும் லாபம் பெற வேண்டும் அல்லது உங்கள் வீடாக இருந்தால் அங்கு உள்ள பண பிரச்சனை சரியாக வேண்டும் எந்த வேண்டுதலை மனதார எண்ணிக் கொண்டு போட வேண்டும்.

- Advertisement -

இப்படி வேண்டுதலோடு இந்த நெல்மணிகளை அதில் போட்ட பிறகு தேங்காய் போட்டீர்கள் என்றால் இந்த கட்டையை வைத்து துளையை அடைத்து விடுங்கள். நீங்கள் வெள்ளி டப்பாவில் போட்டீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை டப்பாவை மூடி போட்டு மூடி விட்டு இதை சிகப்பு நிற துணியில் வைத்து ஒரு முடிச்சாக கட்டி வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைத்து பூஜையறையில் கட்டி தொங்க விடுங்கள்.

தொழில் வியாபாரம் கடை போன்ற இடத்தில் லாபம் வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள். இந்த முடிச்சை கொண்டு சென்று கடைகளில் சுவாமி படம் வைத்திருந்தால் அங்கு கட்டுங்கள் இல்லை என்றால் கல்லாப்பெட்டிக்கு நேராகவோ அல்லது அங்கு பணப்பெட்டி வைக்கும் இடத்திற்கு நேராகவோ இந்த மூட்டையை கட்டி தொங்க விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய தெய்வம் என்ன?

இந்த பரிகாரத்தின் மூலம் நெல்மணி எப்படி முளைத்து வருகிறதோ அது போல இந்த நெல் மூட்டை தொங்கும் இடத்தில் செல்வ மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது தான் இந்த பொருள். இந்த தாந்த்ரீக பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை உங்கள் தொழில் நிறுவனம் அல்லது வீடுகளில் செய்து பார்த்து பலன் அடையலாம் என்று கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -