சேமிப்பு உயர விநாயகர் வழிபாடு

pillaiyar2
- Advertisement -

வருமானம் பெருக பெருக தானாக சேமிப்பு பெருக வேண்டும். ஆனால் ஒரு சில வீடுகளில் வருமானம் உயரும். ஆனால் அந்த பணம், அந்த மாதமே வீண் விரைய செலவுக்கு போய்விடும். உதாரணத்திற்கு மாதம் தோறும் 20 ஆயிரம் வருமானம் வரும். இந்த மாதம் 25 ஆயிரம் வந்தது. அந்த ஐந்தாயிரத்தை சேமிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் எதிர்பாராத மருத்துவ செலவு வந்து அந்த ஐந்தாயிரமும் செலவாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையை நாம் எல்லோரும் எதிர்கொள்வோம். வருமானம் உயர்ந்தாலும் சேமிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், அந்த வீண்விரய செலவை குறைக்க, மருத்துவ செலவை குறைக்க, செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சேமிப்பை உயர்த்தும் விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு உங்களுக்கு சின்னதாக ஒரு வெள்ளி பிள்ளையார் தேவை. இதற்கும் மாறாக வேறு பிள்ளையார் வைக்கலாமா என்ற கேள்விக்கு இடம் கிடையாது. குட்டியா இருந்தாலும் வெள்ளி பிள்ளையார் தான் இதற்கு தேவை. பூஜையறையில் அந்த பிள்ளையாரை வைத்து விடுங்கள். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

சில வீடுகளில் இரவு தூங்கச் செல்லும் வரை பூஜை அறையில் விளக்கு எரியும். உங்க வீட்டில் எப்படியோ. ஆனால், இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பிள்ளையாருக்கு முன்பு விளக்கு எரிய வேண்டும். ஒரு சின்ன எச்சில் படாத பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் நான்கு துளசி இலைகளை போட்டு, துளசி தீர்த்தத்தை விநாயகருக்கு முன்பாக வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எங்களுடைய வீட்டில் வருமானம் பெருக வேண்டும். அந்த வருமானம் சேமிப்பில் தங்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை வையுங்கள். பிறகு அந்த தீர்த்தத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருகி விடவும். அடுத்தபடியாக விளக்கை மலை ஏற்றிவிட்டு, இறைவனுக்கு நமஸ்காரம் செய்து தூங்க செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக அமாவாசை பரிகாரம்

இவ்வளவுதான் வழிபாடு. தொடர்ந்து தினமும் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் உங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, சேமிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். இந்த வழிபாட்டிற்கு இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் செல்வ செழிப்புடன் வாழலாம். வருமானம் வீண்விரயம் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான சக்தி வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -