1 கைப்பிடி சில்லறை காசை எடுத்து இப்படி வையுங்கள் போதும். எங்கு இருக்கும் பணமும் உங்கள் வீடு தேடி வரும். வீண் விரையங்கள் குறையும்.

cash2
- Advertisement -

நான் சம்பாதிக்கக்கூடிய பணம் கொஞ்ச பணமாக இருந்தால் கூட பரவாயில்லை. அந்த பணம் வீண் விரயம் ஆகாமல் நம் வீட்டில் தங்கி இருக்க வேண்டும். நாம் சேமிக்கக்கூடிய பணத்தை நம் குடும்பத்திற்கு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்த வேண்டும். தவிர மருந்து செலவுகள் அல்லது வேறு ஏதாவது வீண் செலவு செய்தால் அந்த பணத்தின் மூலம் நம்மால் எந்த பயனையும் பெற முடியாது. வீட்டில் பணம் தங்காமல் இருப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத பண தரித்திரமும், கண்ணுக்குத் தெரியாத தோஷமும் தான் தடையாக நிற்கிறது. இந்த தடைகளும் தோஷங்களும் தரித்திரமும் நம்மை விட்டு விலக சுலபமாக நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.

cash

ஒரு கைப்பிடி சில்லறை காசு போதும்ங்க. வீட்ல இருக்க அத்தனை பண தரித்திரமும் உங்களை விட்டு விலகும்‌. ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, கையில் எடுத்தால் நிரம்ப இருக்கும் அளவிற்கு சில்லரை காசுகளை வாங்கிக்கொள்ளுங்கள். இந்த சில்லறை காசுகளை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் அல்லது பழமையான கோவில் எதுவாக இருந்தாலும் சரி அந்த கோவிலுக்கு சென்று அங்கு உள்ள மூலவரின் பாதங்கள் இந்த முடிச்சை வைத்து ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். ஒரே முடிச்சு தான். மூன்று அல்லது ஐந்து கோவில்களுக்கு சென்று அங்கு இருக்கும் ஸ்வாமியின் பாதங்களில் வைத்து இந்த முடிசினை அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

uruli

பின்பு இந்த முடிசினை உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வாருங்கள். பித்தளை சோம்பு அல்லது பித்தளையில் இருக்கும் உருளி எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த பாத்திரத்தை முதலில் மஞ்சள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து காய வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த பாத்திரத்திற்குள், தெய்வங்களின் பாதங்களில் வைத்து பூஜை செய்த மஞ்சள் துணியில் முடிந்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா சில்லரை காசுகளை கொட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்தப் பாத்திரம் இப்போது தெய்வ கடாட்சம் நிறைந்த லட்சுமிகடாட்சம் நிறைந்த பாத்திரமாக மாறிவிட்டது. உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை இந்த பாத்திரத்தில் இருக்கும் சில்லரை காசுகளின் மேல் ஒரு முறை வைத்து எடுக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கும் புதிய நகைகளை இந்த பாத்திரத்தில் வைத்து எடுக்கலாம். வண்டி வாகனம் இருந்தால் அந்த வாகனத்தின் சாவியை இந்த பாத்திரத்தில் வைத்து எடுக்கலாம்.

night-sleep-temple

இப்படி இந்த பாத்திரத்தில் நீங்கள் வைத்து எடுக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அது அதிர்ஷ்டம் நிறைந்த பொருளாக மாறி விடும். (சம்பளப் பணம் நீங்கள் வாங்கிய நகை இவைகளை இரண்டு மணி நேரம் அந்த பாத்திரத்தில் இருக்கும் சில்லறை காசுகளின் மீது வைத்து எடுத்தால் போதும்). ஏதோ ஒரு சூழ்நிலையில் நகையை அடமானம் வைத்து விட்டீர்கள். அந்த நகையை மீட்க முடியவில்லை. அடமானம் வைத்த சீட்டை இந்த ஊருளியில் இருக்கும் சில்லரை காசுகளின் மேலே வைத்து எடுங்கள். சீக்கிரமே நகையை மீட்க கூடிய சூழ்நிலை உண்டாக்கி விடும்.

money

மாத சம்பளத்தை இந்த ஊருளியில் இருக்கும் சில்லரை காசுகளின் மேல் வைத்து எடுத்தால், மாத சம்பளம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். பணம் மேலும் மேலும் சேரும். குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அந்த புத்தகத்தை கூட இந்த உருளியின் மேல் வைத்து எடுக்கலாம். நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கும் இந்த உருளி உங்கள் வீட்டினுடைய அட்சய பாத்திரமாகவே இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -