வளர்பிறை அஷ்டமி திதி ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு

swarna-bairavar
- Advertisement -

சிவபெருமானின் அம்சமான “பைரவ மூர்த்தி” காக்கும் கடவுள் என அறியப்படுகிறார். மொத்தம் 64 வகையான பைரவ வடிவங்கள் இருந்தாலும், அவற்றில் 8 பைரவ வடிவங்கள் தான் அதிகம் பக்தர்களால் வழிபடப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக “ஸ்வர்ணாகர்ஷண பைரவர்” எல்லா மக்களாலும் விரும்பி வழிபடப்படுகிறார். ஏனெனில் இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியமான “சொர்ணம்” எனப்படும் “தங்கம்” மற்றும் அந்த தங்கத்திற்கு இணையான செல்வங்களை மனிதர்களுக்கு வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட தெய்வமாக ஸ்வர்ணாகர்ஷண பைரவ மூர்த்தி விளங்குகிறார். அந்த வகையில் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எப்படி ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் நமது வறுமை நிலையை போக்கி, வளமான வாழ்க்கையை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு

காக்கும் கடவுளான திருமால் எனும் நாராயணனுக்கு நிகராக பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவதால் சொர்ணாகர்ஷண பைரவருக்கு “நாராயண பைரவர்” என்கிற ஒரு பெயரும் உண்டு. சொர்ணாகர்ஷண பைரவரின் அருள் ஒருவருக்கு பூரணமாக கிடைக்கும் பட்சத்தில், அவரின் வாழ்க்கையை அற்புதமாக மாறிவிடும் என சொர்ணாகர்ஷண பைரவர் சாதனை மேற்கொண்டு பலன் பெற்ற ஆன்மீக பெரியவர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதற்கு முன்பாக நம் வீட்டில் இருக்கும் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு ஒரு புதிய சொர்ணாகர்ஷண பைரவர் படம் அல்லது சிறிய அளவிலான சொர்ணாகர்ஷண பைரவர் விக்கிரகத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்கின்றவர்கள் தங்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் மிகுந்த தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தூய்மை நிலையை கடைபிடித்து சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் மட்டுமே வழிபாட்டின் முழுமையான பலனை நாம் பெற முடியும்.

- Advertisement -

சொர்ணாகர்ஷண பைரவருக்கு அர்ச்சனை செய்ய எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான ஒரு மூலிகை இலை தேவை. அந்த மூலிகை இலை வேறு எதுவுமில்லை, நாம் உணவில் பயன்படுத்துகின்ற கருவேப்பிலை இலைகள் தான். உங்கள் வீட்டில் கருவேப்பிலை செடி இருக்கும் பட்சத்தில், வண்டுகளால் துளையிடப்படாத முழுமையாக இருக்கின்ற கருவேப்பிலை இலைகளை பறித்து, நீரில் நன்கு முக்கி சுத்தம் செய்து அந்த இலைகளை காம்பிலிருந்து உதிர்த்து, பறித்து தனியே ஒரு செம்பு அல்லது பித்தளை பூஜை தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக உங்கள் வீட்டின் பூஜை அறையில் சொர்ணாகர்ஷண பைரவர் படம் அல்லது விக்கிரகத்திற்கு 21 முந்திரி பருப்பு அல்லது 21 ஏலக்காய்களை மாலையாக கோர்த்து சாற்றி, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, மஞ்சள் வாழைப் பழங்கள் மற்றும் மஞ்சள் நிறத்திலான இனிப்புகளை நைவேத்தியம் சமர்பித்து, ஒரு செம்பு விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். மேலும் வாசனை மிக்க ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி கொளுத்தி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நீங்கள் பைரவர் படம் அல்லது விக்கிரகத்திற்கு எதிராக ஒரு விரிப்பு அல்லது பீடத்தின் மீது சம்மணமிட்டு அமர்ந்து, இப்பொழுது நீங்கள் உதிர்த்து வைத்திருக்கின்ற கருவேப்பிலை இலைகளை கொண்ட அந்த செம்பு அல்லது பித்தளை தட்டை எடுத்து,, ஒவ்வொரு கறிவேப்பிலை இலையாக எடுத்து சொர்ணாகர்ஷண பைரவரின் படம் அல்லது விக்கிரகத்தின் மீது இட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கருவேப்பிலையை இடுவதற்கு முன்பு “ஓம் சுவர்ணாகர்ஷண பைரவாய நம” என்கிற மந்திர ஜபத்தை மேற்கொள்ள வேண்டும்.

இத்தனை கறிவேப்பிலை இலைகள் தான் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிற எண்ணிக்கை ஏதும் கிடையாது. உங்களிடம் எவ்வளவு கறிவேப்பிலை இலைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் சொர்ணாகர்ஷன பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம்.

வளர்பிறை அஷ்டமி தினத்தில் இந்த சொர்ணாகர்ஷண பைரவர் பூஜை செய்து முடித்ததும், அதே தினத்தில் இரவு 8 மணிக்கு உங்கள் வீட்டை சுற்றி இருக்கின்ற தெரு நாய்களுக்கு பிஸ்கட் அல்லது ஏதேனும் ஒரு உணவு வகைகளை சாப்பிட கொடுக்க வேண்டும். நாய்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் வளர்பிறை அஷ்டமி தின சொர்ணாகர்ஷண பைரவர் பூஜை முழுமை பெறுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு மன்னிக்க முடியாத தவறாக சாஸ்திரம் கூறுகிறது! இந்த தவறை செஞ்சா தரித்திரம் தாண்டவம் ஆடுமாம் தெரியுமா?

மேற்சொன்ன முறையில் நம்பிக்கையுடன் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ணாகர்ஷண பைரவ பூஜை செய்பவர்களுக்கு சிறிது, சிறிதாக அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். திடீர் பொருள் நஷ்டம், வீண் விரையம் போன்றவை ஏற்படாதவாறு காக்கும். சிறிய அளவு தங்கம் வாங்குவதற்கு கூட சிரமப்படுபவர்கள், சிறிது காலத்தில் கொஞ்சம், கொஞ்சமாக தங்க நகைகளை வாங்கும் நிலையை அடைவார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி தாராள பணவரவும், எதிர்பாராத வகையில் லாபங்களும் கிடைக்கும். வீட்டில் இருந்த தரித்திர நிலை நீங்கி செல்வ சேகர் உண்டாகும்.

- Advertisement -