பண வரவுக்கு சித்திரை முதல்நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

mahalashmi5
- Advertisement -

நாளைய தினம் தமிழ் வருட பிறப்பு, இந்த தமிழ் வருடத்தின் முதல் நாள் தொடங்கவிருக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாளும் கூட. நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று அந்த மகாலட்சுமியையும், குலதெய்வத்தையும் வேண்டி நாளைய தினம் உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்யும் நல்ல செயல்களின் தாக்கம், இந்த வருடம் முழுவதும் இருக்கும்.

கடன் சுமையில் கஷ்டப்படுபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், நாளைய தினம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சொல்லும் ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வருடம் முழுவதும் நமக்கு பணம் காசு நிறைவாக வருமானமாக வந்து கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

சந்தோஷம் இருக்க வேண்டும். தங்கம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் எழுந்தவுடன் இந்த கனி காணுதல் எனும் வழிபாட்டை நம்முடைய முன்னோர்கள் வைத்துள்ளார்கள். பூஜையறையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தட்டில் வைத்திருக்கும் நகை பணம் பழங்களை பார்க்கும்போது நம்முடைய மனது சந்தோஷப்படும்.

நாம் பார்க்கக்கூடிய பொருட்கள் எல்லாம் இந்த வருடம் முழுவதும் நமக்கு சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்காக தான் இப்படி ஒரு வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாளை நம்முடைய பாரம்பரியத்தை மறக்காமல், கனி காணுதல் வழிபாட்டை சிறப்பாக செய்யுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -

பண வரவுக்கு பரிகாரம்

இன்று இரவே இந்த பரிகாரத்திற்கு தேவையான வேலைகளை எல்லாம் நீங்கள் செய்து வைக்க வேண்டும். எச்சில் படாத ஒரு கிண்ணம் எடுத்துக்கோங்க. அதில் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இந்த தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் தூள், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை நசுக்கி போடுங்க.

வேப்ப இலை, மா இலை, துளசி இலை, இந்த மூன்று இலைகள் கிடைத்தால் இந்த தண்ணீரில் போட்டு, இதை பூஜை அறையில் வைத்து விடுங்கள். பட்டை, ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து இதையும் பூஜை அறையில் தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் வைத்திருக்கும் இந்த தண்ணீரை வடிகட்டி வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து நிலை வாசலில் தெளித்து விட வேண்டும். பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய தண்ணீர் இது. பிறகு வழக்கம் போல அழகாக நிலை வாசலை அலங்கரிக்க கோலம் போட்டு விடுங்கள்.

உங்கள் நிலை வாசல் காலுக்கு பக்கத்தில் மகாலட்சுமியின் பாதங்கள் இரண்டு வரைய வேண்டும். ஏனென்றால், சித்திரை முதல் நாள் வீட்டிற்குள் மகாலட்சுமியை நாம் அழைக்கப் போகின்றோம். இரவு வாசம் நிறைந்த பட்டை லவங்கம் ஏலக்காய் பச்சை கற்பூரம் சேர்த்த பொடி தயார் செய்து பூஜை அறையில் வைத்தீர்கள் அல்லவா. அந்த பொடியை நிலை வாசலுக்கு வெளியில் இருந்து, வீட்டிற்கு உள் பக்கம் தூவி விட வேண்டும்.

நீங்கள் போட்டிருக்கும் மகாலட்சுமியின் பாதத்தின் மீதும் கொஞ்சம் இந்த பொடியை தூவி விடுங்கள். இந்த பாதத்தின் மூலமாக, நீங்கள் தூவி விடும் இந்த பண வசிய பொடியின் மூலமாக, நாளைய தினம் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வருவதாக ஒரு நம்பிக்கை. அதற்காக கடைபிடிக்கக்கூடிய பரிகாரம் தான் இது.

இப்படி சந்தோஷமாக பண வரவையும் மகாலட்சுமியையும் இந்த வருட பரப்பில் உங்களுடைய வீட்டிற்குள் அழைக்கவும். இந்த பரிகாரத்தை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் செய்யலாம். ஆங்கில மாத தொடக்கத்திலும் செய்யலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தை எல்லாம் செய்து முடித்து விடுங்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லவா.

உங்களுடைய குடும்பத்தின் மீது இருக்கக்கூடிய கண் திருஷ்டியை நீக்க வேண்டும் என்பதற்காக ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, இரண்டாக அறுத்து அதில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி உங்கள் நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்ய வேண்டிய சஷ்டி வழிபாடு

உங்கள் குடும்பத்தின் மீது பட்ட கண் திருஷ்டி எல்லாம் அதோடு முடிந்துவிடும். மேலே சொன்ன இந்த எளிமையான பரிகாரங்களை நாளைய தினம் செய்பவர்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் சுபிட்சம் நிறைவாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -