தை மாத ஏகாதேசி, பெருமாள் வழிபாடு

perumal
- Advertisement -

அது எப்படிங்க. பெருமாள் கோவிலுக்கு போகும் போது கை வீசிக்கொண்டு செல்கின்றோம். வரும்போது லட்சக்கணக்கில் பெருமாள், பணத்தை கொடுத்து அனுப்புவாரா? என்ற சந்தேகம் நம்மில் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இதற்கான அர்த்தம் அது கிடையாது. பெருமாளுக்கு நீங்கள் பாசத்தோடு இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தீர்கள் என்றால், பதிலுக்கு பெருமாள் லட்சக்கணக்கான ஆசீர்வாதங்களை உங்களுக்கு கொடுப்பார். அந்த லட்சக்கணக்கான ஆசீர்வாதம், லட்சக்கணக்கான பணமாக மாறும். அதற்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த வழிபாடு தான் இது.

இன்று தைமாத ஏகாதேசி. பெருமாள் கோவிலுக்கு எந்த நேரத்தில் போகணும். கோவிலுக்கு போகும்போது எந்த பொருளை வாங்கி எடுத்துச் செல்லனும். பெருமாள் கோவில் இருந்து மீண்டும் எந்த பொருளை வாங்கி வந்து நம் வீட்டு பண பெட்டியில் வைக்கணும். ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்களை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தை மாத ஏகாதேசி பெருமாள் வழிபாடு

இன்று மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போங்க. எந்த பெருமாள் கோவிலாக இருந்தாலும் அவரை போய் தரிசனம் செய்யலாம். செல்லும் போது உங்கள் கையால் ஏதாவது மஞ்சள் நிற பூக்கள் அல்லது சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொண்டு போங்க. எந்த பூ வாக இருந்தாலும் சரி.

இந்த மஞ்சள் நிற பூ உங்கள் குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும். சிவப்பு நிறப்பு உங்கள் கடனை குறைக்கும். மகாலட்சுமிக்கு வெள்ளை நிற பொருட்களை கொண்டு போய் கொடுக்கணும். திரும்பி வரும்போது கட்டாயம் உங்களுக்கு துளசி இலைகள் பிரசாதமாக கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அந்த துளசி இலைகள் தீர்த்தத்தில் நனைந்திருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தீர்க்கதோடு உங்கள் கைக்கு துளசி இலை வந்தால் அது இன்னும் இன்னும் சிறப்பு. அந்த துளசி இலைகளை கொண்டு வந்து அப்படியே நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். உங்கள் கடன் சுமை குறையும். பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் இருந்து உங்களுக்கு சின்ன பாத்திரத்தில் தீர்த்தம் கிடைக்கும் என்றால் இன்னும் சிறப்பு.

அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு வந்து வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம். பணம் வைக்கும் பெட்டியில் தெளித்து விடலாம். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலவும். அதுவும் இன்று பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப உரிய ஏகாதேசி திதி.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக கல் உப்பு பரிகாரம்

அதிலும் தை மாதத்தில் இந்த திதி வந்திருப்பதால் இந்த திதியில் நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு நமக்கு இரட்டிப்பு பலனை தரும். மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -