தங்கத்தை தண்ணீரில் போட்டு இப்படி வைத்தால் நகை கடன் அடையும், மென்மேலும் தங்கம் பெருகுமாம் தெரியுமா? தங்கம் சேர எளிய பரிகாரம்!

gold-pournami
- Advertisement -

தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் வாங்குவது என்பது சற்று கடினமான விஷயமாக இருக்கிறது. ஆனால் தங்க முதலீடு செய்யும் பொழுது அதனால் உண்டாகக் கூடிய பலன்களும் ஏராளம்! நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே செல்லும் விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும், தங்க நகை கடைகளில் அலைமோதும் கூட்டத்தையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

வாங்கிய நகைகளை அடகு வைத்தும் சிலர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இப்படி அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமலும் தவிக்கின்றனர். நகை கடன் அடையவும், தங்க நகைகள் மென்மேலும் நம் வீட்டில் சேரவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இதனால் உண்டாகக் கூடிய பலன்கள் என்னென்ன? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

தங்க நகை கடன் குறைவான வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதால் அடிக்கடி அதை கொண்டு போய் பேங்கில் அடகு வைத்து விடுகிறோம். அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்றால் வருமானம் அதற்கு ஏற்ப நமக்கு இருக்க வேண்டும். நம்முடைய வருமானத்திற்கு மீறிய கடன் வாங்குவது என்பது நம்முடைய தவறு தான். நகை அடகு போகாமல் இருக்கவும், அடகு வைத்த நகை மீண்டும் நம்மிடம் வரவும், மேலும் மேலும் நகைகள் சேரவும் குரு – சந்திர யோகம் தேவை.

இந்த குரு சந்திர யோகத்தை பெற்று தரக்கூடிய அமைப்பாக இருக்கக் கூடியது பௌர்ணமி தினம் ஆகும். பௌர்ணமி தினத்தில் நாம் செய்யும் எளிய பரிகாரங்களும் மிகப் பெரிய பலன்களை கொடுப்பதாக ஆன்மீக சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் பௌர்ணமி அன்று வீட்டிலேயே சந்திர ஒளி படும் இடத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

தங்கம் என்பது குருவை குறிக்கிறது. சந்திர ஒளி தங்கத்தின் மீது படும்பொழுது அதற்கு குரு சந்திர யோகம் கிடைக்கிறது. இதனால் ஒரு கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பௌர்ணமியில் வீட்டில் சந்திர ஒளி படும் இடத்தில் அந்த பவுலில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். இந்த தண்ணீருக்குள் உங்களிடம் இருக்கும் தங்க காயின் அல்லது பார், அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு தங்க நகை இருந்தால் அதை போட்டு வைக்க வேண்டும். சின்ன நகை இருந்தாலும் போதும்.

இதையும் படிக்கலாமே:
குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள இதோ இப்படி செய்து பாருங்கள்.

இரவு முழுவதும் சந்திர ஒளியில் விட்டுவிட்டு மறுநாள் காலையில் அந்த தங்கத்தை எடுத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பௌலில் இருக்கக் கூடிய தண்ணீரை வீட்டின் நான்கு மூலைகளிலும் தெளிக்க வேண்டும். நீங்கள் வீட்டை துடைப்பதாக இருந்தால் அந்த துடைக்க கூடிய தண்ணீரில் இந்த தண்ணீரை சேர்த்து, வீடு முழுவதும் கூட துடைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் குரு சந்திர யோகம் உங்களுக்கு கிடைக்கப் பெற்று, அடகு வைத்த நகையை மீட்டு எடுக்க கூடிய அளவிற்கு பொருளாதாரமானது உயர துவங்கும். மேலும் மேலும் தங்க நகை சேர்வதற்கு உரிய எல்லா அம்சங்களும் உங்களை சுற்றி வரும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் தான் அதன் முழு பலன்களும் கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -