உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதாக உணர்கிறீர்களா? விநாயகருடைய இந்த ஒரு பொருள் எத்தகைய துஷ்ட ஆற்றல்களையும் தலைதெறிக்க ஓட விட்டுவிடும்! அது என்ன?

arugampul-vinayagar-dhoobam
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் கெட்ட சக்திகள், அமானுஷ்யமாக சில விஷயங்களை உணரும் பொழுது அங்கு எதிர்மறை ஆற்றல் பெருக துவங்குகின்றது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அல்லது பலருக்கு இது போல ஒரு உணர்வு இருந்தால் உடனடியாக இந்த ஒரு தூபத்தை வீட்டில் போட்டால் போதும், எத்தகைய துஷ்ட சக்திகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஒரு பொருள் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருளும் ஆகும். அது என்ன? அதை எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

யாரோ ஒருவருடைய சாபம் உங்களை ஆட்டிப் படைக்கிறது என்றாலோ அல்லது யாரோ ஒருவருக்கு நீங்கள் செய்த பாவம் உங்களை துரத்துகிறது என்றாலோ இது போல வீட்டில் செய்வதன் மூலம் உங்களுக்கு அதற்கான பிராயச்சித்தம் என்னவென்று உணர்த்தக் கூடிய வழிகள் பிறக்கும். அல்லது உங்கள் மீது இருக்கும் பொறாமையால் சிலர் உங்களுக்கு தீய சக்திகளை ஏவி விட்டு இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அது தவிடு பொடியாகும்.

- Advertisement -

அடிக்கடி கணவன், மனைவிக்குள் தேவையே இல்லாமல் சண்டை வருவது, குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து மருத்துவமனைக்கு செலவு செய்வது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் இது போல செய்து பார்த்தால் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். மனது ஒருமுகப்படாமல் தேவையில்லாத சிந்தனையில் மூழ்கி, சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட உங்களுக்கு தெரியாத ஒரு மனநிலையில் இருந்தாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

விநாயகருடைய பரிபூரண ஆற்றல் பெற்றுள்ள அருகம்புல் தான் அந்த ஒரு பொருளாகும். அருகம் புல்லை கொண்டு செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் விக்னங்களை தீர்த்து வெற்றியை கொடுக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. அத்தகைய இந்த அறுகம்புல் விநாயகருக்கு சாற்றி வியாழன் கிழமையில் வழிபட்டு வந்தால், அவர்கள் எந்த வித தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எத்தகைய பிரச்சனைகள் அவர்களை நெருங்கினாலும், அதனை எதிர் கொள்ளும் துணிச்சலும், தைரியமும் உண்டாகும்.

- Advertisement -

ஒரு சிறு அருகம்புல்லுக்கு இருக்கும் ஆற்றல் மிகப் பெரும் மலைக்கு கூட கிடையாது. இந்த அருகம்புல் துஷ்ட சக்திகளை அழித்து, ஒழித்து கட்ட கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. எனவே விநாயகப் பெருமானுக்கு சாற்றிய அருகம்புல் மாலையை காயவிட்டு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். வியாழன் கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் உங்கள் வீட்டில் நீங்கள் சாம்பிராணிப் புகை போடுவது போல தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கொட்டாங்குச்சியை தணலில் இட்டு எரித்து அதில் சாம்பிராணி புகை போடுவது போல, சாம்பிராணியுடன் சேர்த்து இந்த உதிர்த்து வைத்துள்ள விநாயகப் பெருமானுடைய அருகம்புல் தூளையும் தூவி விட வேண்டும். அதில் இருந்து வரும் புகையானது வீட்டில் இருக்கும் எத்தகை அமானுஷ்ய சக்திகளையும் அலற அலற ஓடவிட்டு விடும். விநாயகப் பெருமானுக்கு சாற்றிய அருகம்புல் மாலையை எப்பொழுதும் மற்றவர்களுடைய கால்கள் படாத இடங்களில் அப்புறப்படுத்த வேண்டும். அதில் இருக்கும் ஆற்றல் அபரிமிதமானது எனவே இது போல சாம்பிராணி புகை போடுவதற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -