இந்த செடியை, இப்படி தொட்டு தான் பாருங்களேன்! நீங்க ஜெயிக்கிறதுக்குனே பிறந்தவர்களா மாறிடுவீங்க!

- Advertisement -

மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, பிரச்சனைக்கு குறைவே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. தொடர்ந்து இந்த செடியை 48 நாட்கள், உங்களது கோரிக்கைகளை வைத்து, தொட்டு வந்தாலே போதும். நீங்கள் நினைத்ததெல்லாம் வெற்றிதான்! அப்படிப்பட்ட அந்த அதிசய செடி எது? என்பதைப் பற்றியும், அந்த செடிக்கு இருக்கும் மகத்துவத்தைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thotta-sinungi1

அது என்ன செடியாய் இருக்கும்னு யோசிக்கிறீங்களா? நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச தொட்டாசிணுங்கி செடி தான் அது. சக்தி வாய்ந்த வேப்ப மரம், வன்னி மரம், துளசிச்செடி இவைகளுக்கு இருக்கின்ற அதே சக்தி இந்த தொட்டாசிணுங்கி செடிக்கும் கட்டாயம் உள்ளது. இதனால் மாத விலக்கு காலங்களில் பெண்கள் இந்த தொட்டாசிணுங்கி செடியை கட்டாயம் தொடக்கூடாது.

- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் பல தோல்விகள் பின் தொடர்ந்து கொண்டு வந்தே இருக்கும். நிறைய இன்டர்வியூக்கு போயிட்டே இருப்பாங்க, வேலை கிடைக்காது. திருமணத்திற்காக வரன் பார்க்கச் செல்வார்கள். அமையவே அமையாது! வீட்டில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். அல்லது பண கஷ்டம் இருக்கும். அல்லது யாருக்காவது கடன் தொகையை, பணமாக கொடுத்து ஏமாந்தவர்கள் ஆக இருக்கலாம். அல்லது நம் குடும்பத்தில் யாராவது ஒருவர் நம் பேச்சை கேட்காமல் குறுக்குவழியில் சென்று, தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்களுக்கு இருக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

thotta-sinungi

இதோடு சேர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் தொட்டாசிணுங்கி செடியாக இருந்தாலும் சரி. ரோட்டில் இருக்கும் தொட்டாசினிங்கி சரியாக இருந்தாலும் சரி. அதை தினம்தோறும் உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைத்து, 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு வர வேண்டும். அந்தச் செடியானது நீங்க தொட்டு உடனே சிலுக்கிற மாதிரி ஒரு முறை தொட்டால் போதும்.

- Advertisement -

உங்களுடைய கணவரோ அல்லது உங்களுடைய குழந்தைகளோ உங்கள் சொல் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்களது பெயரை உச்சரித்து அவர்கள் உங்களுடைய பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்து, 48 நாட்கள் இந்த செடியை தொட்டு வணங்கி வந்தாலே போதும். நீங்க எந்த பேரைச் சொல்லி, வேண்டுதல் வைக்கிறீர்களோ, அவர்களிடத்தில் மாற்றத்தை கண்கூடாக காணலாம்.

cash

அதிகப்படியான பணம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அதிகப்படியான லாபத்தை தரக்கூடிய தொழில் அமைய வேண்டும் என்றும், அதிகப்படியான சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து கூட இந்த தொட்டாசிணுங்கி செடியை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு பிரார்த்தனை செய்து பாருங்கள். நீங்கள் வேண்டியது நிச்சயமாக நடக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட வேண்டுதலை வேண்டுமென்றாலும் இந்த செடியிடம் வைக்கலாம். அடுத்தவங்களுக்கு, கெடுதல் நினைக்கிற மாதிரி வேண்டிய கட்டாயம் நடக்காது. நன்மை தரக்கூடிய வேண்டுதலை வைத்தால் நிச்சயம் நீங்க செய்பீங்க.

- Advertisement -

ஆனால், இந்த தொட்டாச்சிணுங்கி செடியை தொடும் 48 நாட்களும் நீங்களும், அசைவம் ஏதும் சாப்பிடாமல், சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 48 நாட்களும் ஒரே கோரிக்கையை தான் வைக்க வேண்டும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு, வாழ்க்கையின் சாதனையாளர்களாக மாற, 48 நாட்கள் இப்படி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு ரோஜா செடியில் மட்டும், எப்படி இவ்வளவு அழகா பூ பூக்குது! என்று மத்தவங்க கேக்குற அளவுக்கு, கொத்துக்கொத்தா அவ்வளவு பூ பூக்கும். ஒரு டம்ளர் இந்த தண்ணீர் ஊற்றினால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have thoothuvalai chedi. athirstam in tamil. ninaithathu nadakka. Ninaithathu nadakka pariharam

- Advertisement -