நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். தொட்டாசிணுங்கி இலை உங்கள் கையில் இருந்தால்.

- Advertisement -

இறைவனிடம் வைக்கும் வேண்டுதல் படிக்க வேண்டுமா. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டுமா. மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய வேண்டுமா. வாழ்வில் துன்பங்கள் நீங்க வேண்டுமா. அல்லது நீங்கள் ராசியான நபராக மாற வேண்டுமா. நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள இந்த உலகத்தில் எத்தனையோ வழிகள் உள்ளது. விரும்பியதை அடைய எத்தனை வழிகளை மேற்கொண்டாலும் முதலில் நம்முடைய மனதில் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் எந்த வேலையை செய்தாலும் அதில் நமக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்.

சரி, வாழ்க்கையில் முயற்சி செய்பவர்கள் எல்லாம் முட்டி மோதி வெற்றி அடைகிறார்களா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் மனிதர்களுக்கு ஒரு பக்கம் தேவைதான். இந்த அதிர்ஷ்டத்தை நம்மிடம் கொண்டு வர சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தொட்டாச்சிணுங்கி இலைகளை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் அருகில் தொட்டாசிணுங்கி செடி இருந்தால் அந்த இலைகளை பறித்து வந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். முடிந்தால் ஒரு சிறிய தொட்டியில் உங்கள் வீட்டிலேயே தொட்டாசிணுங்கி செடி வைத்து வளர்த்து வரலாம். அது வீட்டிற்கு மிகவும் சுபிட்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு செடியாக சொல்லப்பட்டுள்ளது.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு தொட்டாசினிங்கி இலைகளை எடுத்து உங்களுடைய வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் பிரார்த்தனை இறைவனிடம் சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் சரி. ‘நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். கடன் தீர வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும் என்று என்ன வேண்டுதல் வேண்டும் என்றாலும் வைக்கலாம்.’ உங்கள் வாழ்க்கையில் எந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மனதில் நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (ஏதாவது ஒரு வேண்டுதலாக இருக்கட்டும்.)

- Advertisement -

வேண்டுதலை முடித்து விட்டு கையில் இருக்கும் தொட்டாச்சிணுங்கி இலைகளை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வர வேண்டும். தினமும் புதிய தொட்டாசினிங்கி இலைகளை தான் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள்.

சேகரித்து வந்த தொட்டாசிணுங்கி இலைகள் எல்லாம் காய்ந்து போன பின்பு அப்படியே அதை அரைத்து, அந்த பொடியை விபூதியோடு கலந்து கொள்ளுங்கள். இந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டு உங்களுடைய முயற்சியில் ஈடுபட்டால் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியை தரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -