வராக் கடனை வசூல் செய்ய ஒரு கைப்பிடி மிளகு இருந்தாலே போதும். பணத்தை உங்களிடம் வாங்கியவரே கொண்டு வந்து, திருப்பிக் கொடுத்து விடுவார்.

milagu
- Advertisement -

அடுத்தவர்களுடைய கஷ்டத்திற்கு நாம் உதவி செய்தால் நம்முடைய கஷ்டத்திற்கு அந்த ஆண்டவனே வந்து உதவி செய்வான் என்று சொன்னது அந்தக் காலம். இப்போதெல்லாம் அடுத்தவர்களை பார்த்து ஐயோ பாவம் என்று நினைத்து உதவிக்கு சென்றால் அந்தப் பாவம் நம்மை விடாமல் துரத்துகிறது. உதவிக்காக நம் கையில் இருக்கும் பணத்தை கடனாக கொடுக்கின்றோம். ஆனால் கடனை கைநீட்டி வாங்குபவர்களில் சிலர் நியாயமாக இருப்பதில்லை. கை நீட்டி வாங்கும் போது இருக்கக்கூடிய நாணயம் கடனை திருப்பிக் கொடுப்பதில் நிறைய பேர் காட்டுவதே கிடையாது.

bairavar

சிலர் செய்யக்கூடிய தவறுக்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குறை சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் கடன் வாங்கும்போது கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அந்த கடனை திருப்பிக் கேட்டால், கடனை கொடுத்தவன் கெட்டவன் ஆகி விடுகின்றான். என்ன செய்வது? சரி, நீங்கள் உங்களுக்கு தெரிந்தவருக்கோ அல்லது தெரியாதவர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடனைக் கொடுத்து விட்டீர்கள். ஆனால், அந்த கடன் தொகையை வசூலிப்பதில் நிறைய சிக்கல் உள்ளது. கொடுத்த பணத்தை திரும்ப பெற என்ன தான் வழி. ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரத்தை இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

- Advertisement -

பைரவர் வழிபாடு கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் என்பது பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். பைரவர் வழிபாட்டிலேயே மிக மிக அதி சக்தி வாய்ந்த ஒரு பரிகாரம் உள்ளது. இது பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக கொடுத்த கடனை திரும்ப வசூல் செய்து விடலாம்.

Milagu benefits in Tamil

இந்த பரிகாரத்தை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்ய வேண்டும். பௌவுர்ணமி முடிந்த உடன் வரக்கூடிய எட்டாவது நாளில் அஷ்டமி திதி வரும். கேலண்டரில் பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு சரியாக 66 மிளகுகள் தேவைப்படும். 66 மிளகுகளை எண்ணி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மிளக்குகளை ஒரு வெள்ளைத் துணியில் முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இந்த முடிச்சை தேய்பிறை அஷ்டமி அன்று காலை நேரத்திலேயே தயார் செய்து நல்லெண்ணெயில் போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி திதி அன்று மாலை 6 மணிக்கு வைரவர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல வேண்டும். அதாவது உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் நிச்சயமாக அந்த கோவிலில் பைரவர் இருப்பார். அந்த பைரவருக்கு முன்னால் ஒரு மண் அகல் விளக்கில் இந்த மிளகு மூட்டையை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மூட்டையை தீபமாக ஏற்றி விடுங்கள்.

milagu-deepam

இப்படித் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி தினத்தில் 66 மிளகு கொண்ட மூட்டையை பைரவருக்கு தீபமாக ஏற்றி, உங்களுடைய வாராக் கடன் வசூல் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது உங்கள் கைக்கு வந்து சேரும். இப்படி எத்தனை மாதங்கள் செய்வது. தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் பிரச்சனை தீரும் வரை நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்துவாருங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -