கணவன் மனைவி கட்டாயம் இதை பார்க்க வேண்டும். உங்கள் குடும்ப பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொடுக்க இந்த பரிகாரத்தால் மட்டும்தான் முடியும்.

varahi-vilakku
- Advertisement -

கணவன் மனைவி குடும்பம் என்றாலே அதில் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும். ஒருவர் சொல்லக் கூடிய பேச்சை, இன்னொருவர் கேட்டு நடப்பதே கிடையாது. குறிப்பிட்டு சொல்லப்போனால் மனைவி பேசுவதை கணவன் காது கொடுத்து கேட்பதில்லை. கணவன் பேசுவதை மனைவி காது கொடுத்து கேட்பது இல்லை. வாயைத் திறந்தாலே வம்பு, விவாதம், சண்டை சச்சரவு, இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் வாராஹி அம்மன் தான் நமக்கு ஒரு தீர்வை கொடுக்கப் போகிறாள். வராகி அம்மனை நினைத்து உங்களுடைய வீட்டில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்யுங்கள். அன்னை ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களுடைய குடும்பத்திற்கு செல்வ வளத்தையும், நிம்மதியையும், கொடுப்பாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவிற்குள் செல்வோம்.

பெருந்தும்பை இலை, பேய் மிரட்டி இலை என்று சொல்லப்படும் மூலிகை இலையை வைத்து தான் ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம். எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்க கூடிய தன்மை இந்த பேய்மிரட்டி இலைக்கு உண்டு. நிறைய நோய்களுக்கு இது மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலையை வராகி அம்மன் வழிபாட்டில் நாம் எப்படி பயன்படுத்துவது.

- Advertisement -

வராகி அம்மனுக்கு உகந்த நாளான பஞ்சமி திதியில் இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். காலையில் நீங்கள் குளித்து இருந்தாலும், மாலை 6 மணிக்கு பூஜை செய்வதற்கு முன்பாக ஒரு முறை சுத்தமாக குளித்து விடுங்கள். உங்கள் வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த பேய் மிரட்டி இலையை சுருட்டி திரியாக போட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். வாராஹி அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை வைத்து ஏற்றுங்கள். சில பேர் வீடுகளில் வாராஹி அம்மனின் படம் வைக்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. வராகி அம்மனை மனதார நினைத்து கொண்டு, அம்பாளின் பெயரை உச்சரித்து இந்த தீபத்தை பூஜை அறையில் வைத்து ஏற்றி இந்த தீபத்தின் முன்பு அமர்ந்து அம்மனை மனதார நினைத்து வேண்டுதல் வைத்தீர்கள் என்றால், அந்த அம்மன் உங்கள் வீடு தேடி வந்து உங்களுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய வீட்டில் இருக்கும் வறுமையும் வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்படும். இந்த தீபத்தை ஏற்றினால் வீட்டில் பேய் பிசாசு காத்து கருப்பு போன்ற எந்தப் எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கமும் தலைதூக்க முடியாது. வீட்டில் நல்ல சக்தி நிறைவாக இருக்கும். இந்த தீபத்தை மாலை 6.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஏற்றலாம்.

குறிப்பாக கணவன்-மனைவிக்குள் சண்டை, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே இல்லை என்பவர்கள் இந்த தீபத்தை தொடர்ந்து 5 வார வெள்ளிக்கிழமை ஏற்றி பாருங்கள். நீங்கள் நம்பமுடியாத நிறைய நல்ல மாற்றத்தை உங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் பார்க்கமுடியும். நம்பியவர்களுக்கு இந்த வாராஹி தாய் வெறும் சிலை அல்ல. கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பதை நிச்சயம் உணர முடியும். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -