வறுமையை உங்கள் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க, இந்த கருப்பு நிற பொருளை நிலை வாசல்படியில் கட்டி வைத்தாலே போதும். உங்க வீடு எப்போதும் செல்வச் செழிப்போடு பிரகாசமாக இருக்கும்.

vasal-lakshmi-door
- Advertisement -

எந்த சமயம் உங்கள் வீட்டு நிலை வாசலில் வறுமையானது காலை எடுத்து வைக்கின்தோ அந்த சமயம் உங்கள் வீடு இருள் சூழ்ந்த ஒரு நிலைமையை அடைந்துவிடும். வீட்டில் இருள் சூழ்ந்து விட்டால் போதும். வீட்டில் இருக்கும் செல்வ கடாட்சம், சந்தோஷம், நிம்மதி, ஆரோக்கியம், அனைத்தும் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. நம் வீட்டு நிலை வாசலுக்குள் எந்த ஒரு எதிர்மறை சத்தையும் நுழையாமல், லட்சுமிகடாட்சம் நுழைவதற்கு தாந்திரீக ரீதியாக ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்காக.

இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள். நெல்லிக்காய் கொட்டைகள், ஒரு சிறிய கரித்துண்டு, மஞ்சள் நிற துணி. மஞ்சள் நிறத் துணியில், 5 நெல்லிக்காய் கொட்டைகளை வைத்து, ஒரு சிறிய கரித்துண்டை வைத்து சிறிய முடிச்சாக கட்டி உங்கள் நிலை வாசப்படியில் தொங்கவிட்டு விடுங்கள். வாசலுக்கு வெளிப்பக்கம் இதை நீங்கள் மாட்டி வைக்க வேண்டும். இந்த முடிச்சை கட்டும்போது குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சொத்தையும் நுழையக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குல தெய்வத்தின் நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

நெல்லிக்காய்களை வாங்கி மேலே இருக்கும் நெல்லிக்காயை கத்தியை கொண்டு வெட்டி விட்டு, உள்ளே இருக்கும் கொட்டைகளை வெளியே எடுத்து விடுங்கள். அதை கொஞ்ச நேரம் வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் இருக்கக்கூடாது அந்த கொட்டையில். கடைகளில் சென்று கரித்துண்டை வாங்கிக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் அயன் செய்யக்கூடிய கடைகளில் கேட்டால் ஒரு கரித்துண்டு கிடைக்கும். அதை வாங்கி கொண்டாலும் பரிகாரத்திற்கு பயன்படுத்துவதில் தவறு கிடையாது.

இந்த முடிச்சை எப்போது வேண்டுமென்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தயார் செய்து உங்கள் நிலை வாசப்படியில் மாட்டிவிடலாம். இந்த முடிச்சில் இருக்கும் கரித்துண்டு உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு இருளையும், கருப்பான கசப்பான விஷயங்களையும் நுழைய விடாது. அதேசமயம் நெல்லிக்கொட்டை உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை லட்சுமி கடாட்சத்தை ஈர்க்க கொடுக்கக் கூடிய வல்லமை கொண்டது.

- Advertisement -

நீண்ட நாட்களாக உங்களுடைய வீட்டில் தீராத பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்துவிடும். சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருக்கும். மன நிம்மதி என்பதே இருக்காது. சில வீடுகளில் மூன்றாவது நபர்களின் மூலம் கூட அடிக்கடி பிரச்சினைகள் வர தொடங்கும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் நுழைந்தால் கூட அவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தியை இந்த முடிச்சு ஈர்த்துக் கொள்ளும்.

தினமும் வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும்போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து வந்தாலே போதும். வருடத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கக்கூடிய பொருட்களை மாற்றினால் போதும். பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடலாம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு அதிக செலவில்லாத இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -