வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க வாசம் நிறைந்த 2 ஏலக்காய்கள் போதும். வாசலில் நிற்கும் மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து நிரந்தரமாக தங்கி விடுவாள்.

mahalashmi1
- Advertisement -

நாம் ஓடி ஓடி உழைப்பது எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்காக தான். இந்த ஒரு சாண் வயிற்றுக்காக வாழ்க்கையில் எத்தனை போராட்டம் என்று, நின்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், நமக்கே வாழ்க்கையில் மறைந்திருக்கும் ரகசியம் புரிந்துவிடும். அவசர அவசரமாக பணத்திற்கு பின்னால் ஓடுவதற்கு முன்பு ஒரு நிமிஷம் நின்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக மாறும். சரி, அதற்காக பணம் இல்லாமலும் நிச்சயமாக வாழ முடியாது.

வாழ்க்கையை நடத்திச் செல்ல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் இன்றியமையாத ஒன்று. இந்த பணத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் விடாமல் உழைக்க வேண்டும். இஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை சந்தோசமாக செலவு செய்து, தேவைக்கு ஏற்ப சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

சரிங்க, இதெல்லாம் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் இதற்கு மேல் நம் தலையை மீறி வரக்கூடிய பண கஷ்டத்தை தவிர்க்க என்ன செய்வது. வடமாநிலத்தவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி வருகிறார்கள். இது ஒரு சுலபமான பரிகாரம், செலவில்லாமல் வெறும் இரண்டு ஏலக்காய்களை வைத்த இந்த பரிகாரத்தை சுலபமாக செய்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் எந்த கிழமையில் செய்தாலும் தவறு கிடையாது. முடிந்தால் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு செய்வது சிறப்பு. வீட்டுப் பெண்களின் கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய கையில் இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு ஏலக்காய்களை எடுத்து நிலை வாசற்படிக்கு அருகில் செல்லுங்கள். நிலை வாசல் பக்கத்திலும் இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்கிற்கு அருகிலேயே அமர்ந்து இரண்டு ஏலக்காய்களை கையில் வைத்துக்கொண்டு கிரக லட்சுமி, மகாலட்சுமி, குலதெய்வம், இவர்களை மனதார வேண்டிக்கொண்டு அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வரும்படி பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் ஏலக்காய்களை அப்படியே வீட்டிற்குள் பூஜை அறைக்கு எடுத்து வாருங்கள். பூஜை அறையில் அமர்ந்து ஒரு சிவப்பு நிறத் துணியில் இந்த இரண்டு ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு இதை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தாங்க. நிலை வாசலில் இருக்கக்கூடிய தெய்வங்களை இந்த ஏழைக்காய்களின் மூலம் வசப்படுத்திக் கொண்டு வந்து நம் வீட்டு பணப்பெட்டியில் வைத்திருக்கின்றோம். வடமாநிலத்தவர்கள் பணம் நகை இவைகளை வசியம் செய்வதற்கு ஏலக்காய்களை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர்கள் மகாலட்சுமி வசிய பூஜையில் செய்யக்கூடிய நிவேதனத்தில் இந்த ஏலக்காய்களை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நல்ல வாசம் நிறைந்த தெய்வ கடாட்சம் நிறைந்த இந்த ஏலக்காய்க்கு நல்ல தேவதைகளை நல்ல சக்தியை குறிப்பாக செல்வ வளத்தை வசியம் செய்யக்கூடிய தன்மை நிறையவே இருக்கின்றது. உங்களுக்கு இவ்வளவு பெரிய பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இரண்டு ஏலக்காய்களை கையிலெடுத்து மனதார மகாலட்சுமி பிரார்த்தனை செய்து கல்லா பெட்டியில் உள்ளே, பண பெட்டியில் போட்டு வையுங்களேன். நடக்கும் மாற்றத்தை உங்களால் நம்பவே முடியாது. முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்று கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -