செய்யும் வேலையில் ப்ரமோஷன் மேல் பிரமோஷன் கிடைத்து, உங்க மேல் அதிகாரிகளின் சீட்டில், நீங்க உட்கார வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு இருக்குதா? புதன்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்குங்க போதும்.

budhan
- Advertisement -

வேலையே இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை. நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்ற ஆசை. சில பேருக்கு அவர்களை விட உயர் அதிகாரிகளை பார்க்கும்போது நாமும் இதே போல உயர்ந்த பதவியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை தோணும். உங்களுக்கும் இப்படிப்பட்ட ஆசை எல்லாம் இருக்குதா. நீங்கள் புதன்கிழமை அன்று இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தாலே போதும். வேலையே இல்லை என்பவர்களுக்கு கைநிறைய சம்பாத்தியத்தோடு ஒரு வேலை கிடைக்கும். வேலையில் இருந்து கொண்டே பிரமோஷனுக்காக முயற்சி செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிரந்தர வருமானத்திற்கு ஒரு தீர்வை தரும் ஆன்மீகம் பரிகாரம் இதோ உங்களுக்காக.

நிரந்தர வேலை கிடைக்க பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்ய நமக்கு பச்சை பயிறு தேவை. அந்த பச்சை பயிறை புதன்கிழமை அன்றுதான் வாங்க வேண்டும். அறிவு, திறமை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகத்துக்கு உரிய பயிறு பச்சை பயிறு. ஒரு புதன்கிழமை பச்சைபயிறு வாங்கி வந்து, ஒரு செம்பு பாத்திரத்தில் கொட்டி விட வேண்டும். சின்னதாக செம்பு டம்ளர் இருந்தால் கூட போதும். அந்த செம்பு டம்ளர் நிரம்ப பச்சை பயிறு கொட்டி விட்டு, அந்த டம்ளரை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். வலது கை உள்ளங்கையை டம்ளருக்கு மேலே மூடியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். பச்சைப்பயிறு, டம்ளர் நிரம்ப இருக்கும்போது உங்களுடைய வலது உள்ளங்கை அந்த பச்சைப் பயிரில் படும்படி இருக்கட்டும்.

- Advertisement -

பச்சைப்பயிரை இப்படி கையில் வைத்துக்கொண்டு பூஜை அறையில் இறைவனை பார்த்தவாறு அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் கடவுளிடம் குலதெய்வத்திடம் சொல்லுங்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டுமா. அல்லது பிரமோஷன் கிடைக்க வேண்டுமா, அல்லது வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கக் கூடிய தேர்வில் முதல் வெற்றியை பெற வேண்டுமா என்பது உங்களுடைய தேவையை பொறுத்தது.

உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட ஒரே ஒரு தேவையை மட்டும் சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த வேண்டுதலை வையுங்கள். இந்த புதன்கிழமை, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால், அடுத்த புதன்கிழமை வரை டம்ளரில் இருக்கும் பச்சை பயிறை மாற்ற வேண்டாம். இதே போல வேண்டுதலை தினமும் செய்து வர வேண்டும்.

- Advertisement -

புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வேண்டுதல் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும். வேண்டுதலை முடிந்துவிட்டது அடுத்த புதன்கிழமை வந்துவிட்டது. 7 நாட்கள் கடந்து விட்டன. செம்பு சொம்பில் இருக்கும் அந்த பச்சை பயிரை கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட வேண்டும். கடலிலும் விடலாம். இந்த இரண்டுக்குமே வழியில்லை எங்கள் வீட்டு பக்கத்தில் நீர் நிலை இல்லை என்பவர்கள் இதை செடி கொடிகள் இருக்கக்கூடிய இடங்களில் கொட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் அருளை முழுமையாக பெற சங்கு தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றி பாருங்கள். எட்டு திக்கிலும் இருந்து பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

இந்த பரிகாரத்தை எத்தனை வாரங்கள் செய்வது. ஒரு வாரம் செய்த பின்பு நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகளில் முன்னேற்றத்தை பாருங்கள். உங்களுக்கு மன திருப்தி இருக்கிறது என்றால் மூன்று வாரம் அல்லது ஐந்து வாரம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர, வாழ்க்கையில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை காண்பீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -