மனதில் இருக்கும் ஆசைகள் தடையில்லாமல் அப்படியே நிறைவேற இப்படி இதுல 11 முறை எழுதி வச்சாலே போதுமே! குறையோடு இருப்பவர்களுக்கு நிறைவு தரும் எளிய பரிகாரமா?

- Advertisement -

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், பிரார்த்தனைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் நிறைவேறுவதற்கு ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஏற்ப காலங்களும் உண்டு. சில ஆசைகள் நாளைக்கே நிறைவேறிய விடக்கூடியதாக இருக்கும். சில ஆசைகள் நிறைவேறாமலேயே பல காலம் இழுத்து அடித்துக் கொண்டே இருக்கும். இப்படி உங்கள் கனவுகள் எதுவாக இருப்பினும் அது உடனே நடக்க இப்படி எழுதி வச்சாலே போதும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது. அப்படியான ஒரு ரகசிய எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நகை, பணம், சொத்துக்கள் எதுவும் உங்களிடம் இல்லையா? வீடு வாங்க வேண்டும்? நிலம் வாங்க வேண்டும்? என்கிற ஆசையுடன், கனவுகளுடன் இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நகை சேர வேண்டும், பணம் அதிகரிக்க வேண்டும், வருமானம் உயர வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் மனதில் என்ன கோரிக்கைகள் இருந்தாலும், அதை இந்த மாதிரியான பரிகாரத்தை செய்யும் பொழுது தடையில்லாமல் நிறைவேறும் என்பது தான் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

குழந்தை இல்லாத தம்பதிகள், படிப்பில் முன்னேற்றம் இல்லாத குழந்தைகள் போன்றவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை முதலில் ஒரு புதிய நோட்டு ஒன்றை சிறிய அளவில் வாங்கி அதில் எழுதிக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் ‘சித்ரகுப்தர் படியளக்க’ என்று எழுதிவிடு பின்னர் உங்கள் ஆசைகள் எதுவாக இருப்பினும் அதை 11, 21, 108 என்கிற எண்ணிக்கையில் நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும். இதை முன்னோர்கள் சித்ரா பௌர்ணமியில் செய்வதுண்டு.

நீங்கள் எழுதும் பொழுது விரிவாக, விவரமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. வீடு கட்ட வேண்டும், விரைவில் திருமணத்திற்கு நகையை சேர்க்க வேண்டும், குழந்தை படிப்பில் முன்னேற வேண்டும், மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும், இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டும் இப்படி உங்களுடைய ஆசைகள் எதுவுவோ அதை 11 முறை அல்லது மேற்கூறிய எண்ணிக்கையில் நீங்கள் உங்களுடைய கைப்பட எழுதி அதை ஒரு மஞ்சள் நிற துணி பையில் போட்டு மடித்து பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அந்த காலங்களில் எல்லாம் மஞ்சள் பையைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். திருமணம், விசேஷம், விழாக்கள், நகை வாங்க செல்பவர்கள் யாராக இருப்பினும் மஞ்சள் பையிலேயே அதை வாங்கி வருவார்கள். குறிப்பாக பணத்தை மஞ்சள் பையில் வைத்து தான் கொண்டு வருவார்கள். மஞ்சள் மங்களகரமான நிறம் மட்டும் அல்ல, மஞ்சள் நிற துணி பையில் நீங்கள் இது போல உங்களுடைய வேண்டுதல்களை எழுதி பூஜை அறையில் வைத்தால் அது விரைவாக நிறைவேறும் என்கிற சாஸ்திர நம்பிக்கையும் அந்த காலத்தில் உண்டு.

பூஜை அறையில் வைத்து நீங்கள் எப்பொழுதும் போல தூப, தீப, ஆரத்தி அதற்கும் சேர்த்து காண்பித்துக் கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம் சிறிதளவு அதற்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகள் நிறைவேறும் வரை இந்த மஞ்சள் பை அப்படியே பூஜை அறையில் நோட்டுடன் இருக்க வேண்டும். நோட்டு புத்தகத்துடன் கண்டிப்பாக நீங்கள் எழுதிய பேனாவையும் அப்படியே வையுங்கள். ஆசைகள் நிறைவேறியவுடன் நீங்கள் வேறு ஒரு நோட்டில் எழுதி மீண்டும் இதே போல செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -