இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (31-01-2019) ஹாமில்டன் நகரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான் களமிறங்கினர்.
ரோஹித் 7 ரன்கள், தவான் 13 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாற்றம் கண்டது. பின்னர் வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பதால் இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சாஹல் அதிகபட்சமாக 18 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரி நாத் கூறுகையில் : இந்திய அணியின் இந்த ஆட்டம் மிக மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினர். மேலும்,இந்த போட்டியில் நியூசிலாந்து வீரரான போல்ட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரின் பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது.
இந்திய அணி கோலி மற்றும் தோனி இல்லாத நிலைமையில் இந்திய அணி இப்படித்தான் தடியுமாறும் என்பதை இந்திய அணி தற்போது காண்பித்துள்ளது. இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட நிலைத்து நின்று ஆட வில்லை. இந்த போட்டியில் தோனி மற்றும் கோலி ஆகியோரது அனுபவ ஆட்டம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பத்ரி நாத் தெரிவித்தார் .
இதையும் படிக்கலாமே :
ஓய்வினை எடுக்க தனிவிமானத்தில் பறந்த கோலி மற்றும் அனுஷ்கா – பதிவு உள்ளே
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்