அரச வாழ்வை தரும் அரச மரத்தை இப்படி வழிபட்டால் ராஜ யோகம் தேடி வரும்.

arasa maram pray
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் மரவழிபாட்டிற்கென பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதிலும் ராஜ விருட்சம் என்று பெயர் பெற்ற இந்த அரச மர வழிபாடு அனைத்து மர வழிபாட்டிலும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்து அரச மரத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்கின்றனர்.

இந்த மரத்தின் அடியில் பிரம்மாவும் நடுப்பகுதியில் விஷ்ணுவும் மேல்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்வதால் முப்பெரும் தேவியரும் இதில் வாசம் செய்கிறார்கள். இந்த ஒரு விருட்சத்தில் அனைத்து தெய்வங்களின் வாசமும் நிறைந்திருப்பதால் இந்த மரத்தினை நாம் முறையாக வழிபடும் போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த அரச மரத்தினை சுற்றி வரும் போது நம்முடைய ஞானம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் அரசமரத்தடி விநாயகர் வழிபாடு அத்தனை சிறப்பு வாய்ந்தது. இந்த அரச மரத்தினை நாம் எந்தெந்த நாளில் எப்படி வணங்கினால் இந்த பிரச்சனைகள் தீரும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

அரச மரத்தை எந்தெந்த கிழமையில் சுற்றினால் என்னென்ன பலன்கள்

திங்கட்கிழமை – சகல சௌபாக்கியங்கள் கிடைப்பதுடன் சிவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை – நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறுவதுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அங்கார காரகன் முருகப்பெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

புதன்கிழமை – வியாபாரம் பெருகும் தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதுடன் புதன் கிரகம் பெருமாளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

வியாழக்கிழமை – கல்வி ஞானம் அறிவு பெருகுவதுடன் பெருகுவதுடன் குழந்தைகள் படிப்பில் நல்ல நிலைக்கு வருவதுடன் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை – கடன்கள் அடைவதோடு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் கிடைக்கும்

சனிக்கிழமை – தீராத நோய்கள் தீருவதுடன் நவகிரகங்களின் தோஷங்கள் நீவது நீங்கும் அத்துடன் சனி பகவானின் அருட்பாவை கிட்டும்.

ஞாயிற்றுக்கிழமை – குடும்பத்தில் உள்ள தீராத பிரச்சனைகள் தீர்வதுடன் சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இந்த அரச மரத்தை தினமும் சூரிய உதயத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி 11 முறை சுற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கை நிலையை மாறி விடும். இந்த மரத்தை மாலை நேரத்தில் மாலை நேரத்தில் தொடுவதோ கூடாது.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க துளசி செடியில் நாணயத்தை வைத்து இப்படி பூஜை செய்யுங்கள். பணம் பலவழிகளில் வரும்.

அரச வாழ்வை தரும் அரச மரத்தை அனுதினமும் வழிபட்டு நம்முடைய வாழ்க்கையில் எல்லா செல்வா நலன்களையும் பெற்று இன்பமாய் வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -