இந்த 2 பச்சை நிறப் பொருட்களை உங்களோடு எடுத்து சென்றாலே போதும். நடக்காத நல்ல காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.

sivan
- Advertisement -

பொதுவாகவே பச்சைநிற பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும்போது பச்சை நிற ஆடையை அணிந்து சென்றால், நாம் செல்லக்கூடிய காரியம் நமக்கு சாதகமாக நல்லபடியாக முடிய நிறையவே வாய்ப்புண்டு. பச்சை நிறத்தின் அடிப்படையில், நமக்கு வெற்றி கிடைக்க நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டிய 2 பச்சை நிற பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lingam-vilva-archanai

நமக்கு வெற்றியைத் தரக்கூடிய அந்த 2 பொருட்களில் முதலாவது பொருள் அருகம்புல். இரண்டாவது வில்வ இலை. இது இரண்டுமே நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இருப்பினும் இதன் அருமை பெருமைகளை நம்மால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அருகம்புல்லை வாங்கினால் விநாயகர் கோவிலுக்கு கொடுத்து விட்டு வந்துவிடுவோம். வில்வ இலைகளை கோவில் வாசலில் இருந்து வாங்கி, உடனேயே அதை அப்படியே சிவபெருமானுக்கு கொடுத்துவிட்டு வந்து விடுவோம்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களையும் நம் கையில் எடுத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வருவதே கிடையாது. இறைவனுக்கு கொடுக்கக்கூடிய மகத்துவம் வாய்ந்த எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை வாங்கி நம் வீட்டிற்கு கொண்டு வந்து, அதன் பின்பு கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவனுக்கு கொடுப்பதே சிறந்த ஒரு முறையாக சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருளாக இருந்தாலும் அதை சிறிதளவாவது உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வரும் பழக்கத்தை இனியாவது வைத்துக் கொள்ளுங்கள். சரி, தலைப்புக்கான விடையை தெரிந்து கொள்வோம்.

vetrilai-arugampul-malai

நீங்கள் முக்கியமான இடங்களுக்கு வெளியே செல்லும்போது, அருகம்புல்லின் மேல் நுனி பகுதியையும், வில்வ இலைகள் இரண்டையும் எடுத்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களுடைய பர்ஸ்ஸிலோ அல்லது ஹேண்ட் பேகிலோ அல்லது பாக்கத்திலோ வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் செல்லக்கூடிய அந்த காரியம் நிச்சயம் உங்களுக்கு சாதகமான வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

ஆனால் ஒருநாள் பயன்படுத்திய இந்த இரண்டு பொருட்களை மறு நாள் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் இதை உங்களுடன் எடுத்துச் சென்று விட்டாலே அதனுடைய சக்தியை அது இழந்து விடுகின்றது. தேவைப்பட்டால் புதியதாக தான் வில்வ இலையையும் அருகம்புல்லையும் மீண்டும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படி இந்த இரண்டு பொருட்களை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லும்போது உங்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர் மறை ஆற்றல்கள் அனைத்தும் செயல் இழக்கும். நேர்மறை ஆற்றல் அனைத்தும் விரைவாக செயல்பட தொடங்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்கள் வசம் ஆவார்கள். உங்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் வலிமை பெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் தடைபடாமல் நடப்பதற்கு இது ஒரு சுலபமான வழி.

green

தினம்தோறும் வெளியே செல்லும்போது இந்த இரண்டு பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. முக்கியமான காரியத்திற்காக செல்லும்போது, ஒரு இன்டர்வியூக்கு செல்லும்போது, சுப காரியத்திற்காக செல்லும்போது, நிச்சயமாக இதை உடன் எடுத்துச் செல்லுங்கள் ‘எந்த ஒரு நல்ல விஷயத்திற்கு சென்றாலும் எனக்கு முன்னாடி என்னோட கெட்ட நேரம் போய் நிக்குது.’ என்ற வார்த்தை இனி உங்களுடைய வாயிலிருந்து வராது. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு முன்னால் உங்களுடைய நல்ல நேரமே போய் நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -