ஞாயிற்றுக்கிழமையில் இவற்றை தவறாமல் செய்யுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கண் திருஷ்டிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்

kan
- Advertisement -

வாழ்வில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள வீட்டில் சில எளிய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை தொடர்ந்து செய்திட வேண்டும். நம்முடைய வளர்ச்சியை மற்றவர்கள் வியந்து பார்ப்பதே நமக்கு பிரச்சனையை உண்டாக்கும். மற்றவர்களின் பொல்லாத பார்வையினால் உண்டாவதே கண்திருஷ்டி ஆகும். இவ்வாறான எதிர்மறை ஆற்றலை வீட்டில் இருந்து விரட்ட சில எளிய பரிகாரங்களை எவ்வாறு செய்வது? அதனை எந்த இடத்தில் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fear-pei-kanavu

பரிகாரம்: 1
சிறிய கற்றாழைச் செடியை எடுத்துக் கொண்டு அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விட வேண்டும். பின்னர் அவற்றின் வேர்ப்பகுதியில் சிறிது நூலைக் கட்டி நிலை வாசலின் வெளிப்புறம் மேற்பகுதியில் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிற்கு வருபவர்கள் இதனை பார்த்துவிட்டு உள்நுழையும் பொழுது அவர்களின் கண் பார்வையிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல் இந்த கற்றாழை செடியில் பட்டு அதன் பாதிப்புகள் நம்மீது விழாமல் இருக்கும்.

- Advertisement -

பரிகாரம்: 2
கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை இரண்டாக அரிந்து ஒரு பகுதியை சிகப்பு நிற குங்குமத்தையும், மறுபகுதியில் மஞ்சளையும் தடவி வைக்க வேண்டும். இதனை உங்கள் வீட்டின் வாசலில் இடது புறம் ஒன்று, வலது புறம் ஒன்று என வைக்க வேண்டும். அப்படி இல்லை எனில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல்லுப்பு நிறைத்துக் கொண்டு அதன்மீது இவை இரண்டையும் வைத்து வாசலில் வைத்து விட்டாலும் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்திவிடும்.

lemon

பரிகாரம்: 3
அதே போல் ஒரு எலுமிச்சை பழத்தை சுத்தமாக கழுவிக் கொண்டு இரண்டாக அரிந்து அதில் மகாலட்சுமியின் வாசம் நிறைந்த கிராம்புகளை எலுமிச்சை பழத்தின் இருபுறங்களிலும் சொறுகி வைத்துவிட வேண்டும். இதனை வீட்டின் வாசலில் வைத்து விட்டால் எதிர்மறை சக்திகளை அழித்து மகாலட்சுமி வாசத்தை எப்பொழுதும் வீட்டில் நிலவச் செய்யும்.

- Advertisement -

பரிகாரம்: 4
கண் திருஷ்டி அகற்றும் பொருட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது படிகாரம் ஆகும். இந்த படிகாரத்தை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதனை ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்கும் ஜன்னல் பகுதிக்கு அருகே வைத்து விட வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் பார்ப்பவர்களின் பார்வை இதன் மீது விழும் பொழுது அதனால் உண்டாகும் எதிர் மறை ஆற்றலை அழிக்கும் சக்தி இந்த படிகாரத்திற்க்கு இருக்கிறது.

padikaram1

பரிகாரம்: 5
ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் நிறைத்து கொண்டு அதில் ஒரு எலுமிச்சை பழத்தை சேர்த்து வீட்டின் ஹாலில் மற்றவர்களின் கண் பார்வை படும் இடத்தில் வைத்துவிடவேண்டும். வீட்டிற்குள் நுழைந்தவர்களின் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் ஆற்றல் படைத்தது இந்த எலுமிச்சை பழம். இவ்வாறு ஆனால் வைக்கப்படும் எலுமிச்சை பழச்சாறு எந்த தீமை நமது வீட்டிற்குள் நுழைந்தாலும் அவற்றால் வரும் ஆபத்துகளில் இருந்து நாம் விடுபட முடியும்.

lemon-glass

இவ்வாறான கண் திருஷ்டி நீக்கும் எளிய பரிகாரங்களை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து உங்கள் வாழ்க்கை வளமாக அமைய வாழ்த்தி விடை பெறுகிறோம்.

- Advertisement -