கடன் தீர, பண பிரச்சனை சரியாக பரிகாரம்

murgan2
- Advertisement -

என்னதான் வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் சரிவர செய்தாலும் கடன் பிரச்சனை குறையவில்லை. என்னுடைய கடன் தொந்தரவு மேலும் மேலும் அதிகரிக்கிறது. பணவரவில் தடை இருக்கிறது என்பவர்கள், இந்த ஒரு சூட்சமமான விஷயத்தையும் முயற்சி செய்து பாருங்கள். நிறைய காசு செலவு செய்து பரிகாரம் செய்ய வேண்டாம்.

இந்த திசையில் நின்று மனப்பூர்வமாக வேண்டுதல் வைத்தாலே உங்களுடைய கடன் பிரச்சனை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த திசையில் நின்று வேண்டுதல் வைக்க வேண்டும். எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். முருகா துணை முருகா. துணை முருகா. துணை.

- Advertisement -

கடன் தீர்க்கும் பரிகாரம்

உங்கள் வீட்டு தென் கிழக்கு மூளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தென்கிழக்கில், கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள் அல்லது அமர்ந்து கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம். கையில் இரண்டு ஏலக்காய்களை வைத்துக் கொண்டு முருகனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

பணக்கஷ்டம் தீரனும், கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்கணும், வருமானம் பெருக வேண்டும் முருகா, என்று உங்களுக்கு எப்படி தோணுதோ, உங்கள் கஷ்டம் தீர அப்படி வேண்டிக்கோங்க. தென்கிழக்கில், கிழக்கு பார்த்தவாறு இந்த வேண்டுதலை வைத்துவிட்டு, தென்மேற்கு திசையில் உங்கள் கையில் இருக்கும் ஏலக்காயை கொண்டு போய் வைக்க வேண்டும்.

- Advertisement -

எப்படி வைக்கணும் தெரியுமா. 10 ரூபாய் நோட்டு, 50 ரூபாய் நோட்டு, ஏதோ ஒரு நோட்டு எடுத்துக்கோங்க. அதன் நடுவே இந்த 2 ஏலக்காயை வைத்து, அந்த நோட்டை சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி தென்மேற்கில் வைத்து விடுங்கள். பண சுழற்சி உங்களிடம் அப்போது அதிகரிக்க தொடங்கும்.

வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முருகனை நினைத்து செய்ய வேண்டும். ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை குறிப்பாக மதியம் 1:15 மணிக்கு இந்த வேண்டுதலை வைத்தால், இந்த பரிகாரத்தை செய்தால், உங்கள் கடன் சுமை நிச்சயம் குறையும்.

- Advertisement -

இதே போல ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஏலக்காயை வைத்து, ஒரு ரூபாய் நோட்டை வைத்து, சுருட்டி நூல் போட்டு கட்டி ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொண்டே வாருங்கள். தொடர்ந்து 11 செவ்வாய், 21 செவ்வாய் செய்யும் போது உங்களுக்கே பணப்புழக்கத்தில் ஒரு மாற்றம் தெரியும். கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க வழி பிறக்கும். வருமானம் பெருக்கும்.

பரிகாரத்தை நிறைவு செய்யும்போது, சுருட்டி வைத்திருக்கும் நோட்டை எல்லாம் எடுத்து, கடன் காரங்களுக்கு கடனை திருப்பித் தரும் தொகையோடு சேர்த்து கொடுத்திடுங்க. நம்பிக்கை உள்ளவர்கள் முடிந்தவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்

பின்குறிப்பு: நீங்கள் வேலைக்கு போறவர்களாக இருந்தாலும் சரி, செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு அலுவலகத்திலேயே தென் கிழக்கு மூலையை கண்டுபிடித்து 2 ஏலக்காயை கையில் வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த ஏலக்காயை பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு வந்துருங்க. வீட்டுக்கு கொண்டு வந்து ரூபாய் நோட்டில் வைத்து சுருட்டி, தென்மேற்கு மூலையில் வைக்கலாம் தவறு கிடையாது.

- Advertisement -